ஜன. 11 22:04
(வவுனியா, ஈழம்)
கோட்டபாய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், பிரதான கட்சிகளும் கூடிச் செயற்படுவது தொடர்பான இணக்கப்பாட்டுக்கு வர மறுக்கின்றன. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்களை முன்வைக்கின்றன. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டு முரண்பட்டு வரும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரைவில் ஆட்சி அமைக்குமென அதன் தலைவா் மைத்திரிபால சிறிசேன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். ஆனால் எந்தக் கட்சியோடு இணைந்து ஆட்சியமைக்கப்படும் என்று அவா் கூறவில்லை.