செய்தி: நிரல்
டிச. 10 12:29

நிறைவேற்று அதிகார முறையை இல்லாதொழிக்குமாறு வலியுறுத்தி ஹட்டனில் மக்கள் போராட்டம்

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தீர்மானத்திற்கு அமைய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததை அடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தீர்வின்றித் தொடர்ந்து செல்லும் நிலையில், இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்குமாறு வலியுறுத்தி மலையகத்தின் ஹட்டனில் கண்டனப் போராட்டம் இடம்பெற்றது. மலையகத்தை மையப்படுத்தி இயங்கும் இளைஞர் அமைப்புகளின் ஏற்பாட்டில், இன்று முற்பகல் 11 மணியளவில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நாடு இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
டிச. 10 11:41

கிராமசேவகர் இடமாற்றப்பட்டதைக் கண்டித்து புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக அரசியல் நெருக்கடி தொடர்கின்ற நிலையில், அரசாங்க அதிகாரிகளது இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் –புன்னாலைக்கட்டுவன் (208) பகுதி கிராமசேவகர் இடமாற்றம் செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் நவடிக்கை எனத் தெரிவித்து கண்டனப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிராமசேவகருக்கு வழங்கப்பட்ட இமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இன்று காலை 9 மணியவில் புன்னாலைக்கட்டுவன் கிராமசேவகர் அலுவலகத்தின் முன்னால் ஒன்றுகூடிய கிராம மக்கள் பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
டிச. 09 20:32

முல்லைத்தீவில் கோட்டையை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களம்

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த 2009 ஆம் ஆண்டு இன அழிப்பு போர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து இங்கு இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினர் தாம் நினைத்தவாறு பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக மக்கள் குற்றம்சுமத்திவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்துள் காணப்படும் முல்லைத்தீவு கோட்டையை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளமை ஏன் என்று பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
டிச. 09 12:55

கிளிநொச்சியில் தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

(கிளிநொச்சி, ஈழம்) சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட வர்த்தக தொழில் பொது தொழிலாளர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் தொழில் புரியும் இடங்களில் ஆண் பெண் தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் இன்று காலை 9 மணிக்கு தொழில் புரியும் இடங்களில் ஊழியர்கள் மீதான வன்முறையை நிறுத்து எனும் தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
டிச. 09 00:08

மூன்று இலட்சம் மக்களை அழைத்து கொழும்பில் மூன்று நாள் தொடர் பேரணி நடத்த ரணில் தரப்பு திட்டம்

(அம்பாறை, ஈழம்) மைத்திரி - மகிந்தவின் செயற்பாடுகளை கண்டித்தும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் எனக் கோரியும் ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக மக்கள் பேரணி ஒன்றை நடத்தவுள்ளது. மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களை கொழும்பு நகருக்குள் வரவழைத்து பேரணியை நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது. கொள்ளுப்பிட்டி காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் இல்லம் ஆகியவற்றை முற்றுகையிட்டு பேரணி நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்து உயர் நீதிமன்றம் எந்தவகையான தீர்ப்பை வழங்கினாலும் பேரணி தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.