டிச. 10 12:29
(முல்லைத்தீவு, ஈழம்)
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தீர்மானத்திற்கு அமைய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததை அடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தீர்வின்றித் தொடர்ந்து செல்லும் நிலையில், இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்குமாறு வலியுறுத்தி மலையகத்தின் ஹட்டனில் கண்டனப் போராட்டம் இடம்பெற்றது. மலையகத்தை மையப்படுத்தி இயங்கும் இளைஞர் அமைப்புகளின் ஏற்பாட்டில், இன்று முற்பகல் 11 மணியளவில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நாடு இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.