டிச. 13 21:43
(சென்னை, தமிழ்நாடு)
இந்திய ஒன்றியத்தின் முழு பொருளாதாரத்தையும் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் செயல்படும் நடுவண் வங்கியின் (Reserve Bank of India) ஆளுநர் உர்ஜித் பாடேல் பதவி விலகியதை அடுத்து, ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கம், வரலாற்று பட்டம் பெற்று இந்திய ஆட்சியியல் பணியில் இருந்த சக்திகந்ததாஸ் என்பவரை அப்பொறுப்புக்கு நியமித்துள்ளது. உர்ஜித் பாடேல் பதவி விலகிய சர்ச்சையே இன்னும் ஓயாத வேளையில், பொருளாதாரத் துறையில் எவ்வித பின்புலமும் இல்லாத ஒருவர் இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தவல்ல நடுவண் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மேலும் சர்சையினை உருவாக்கியுள்ளது.