நிரல்
ஜன. 01 21:18

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் தாக்குதல் நடத்த வந்த வாள்வெட்டுக்குழுவினர் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலத்தில் வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவங்களும் அதற்கான முயற்சிகளும் தொடந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், கொக்குவில் - காந்திஜீ சனசமூக நிலைய பகுதியில் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொள்ளும் நோக்குடன் அப்பகுதிக்கு வந்த குழுவொன்றை அப்பிரதேச இளைஞர்கள் ஒன்றிணைந்து, வருட ஆரம்ப நாளான இன்று செவ்வாய்க்கிழமை மதியம் மடக்கிப் பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜன. 01 20:21

முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய மீன்பிடி படகு இந்தியாவுக்குச் சொந்தமானது - விசாரணையில் தகவல்

(முல்லைத்தீவு, ஈழம்) முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய மீன்பிடி படகு இந்தியாவுக்குச் சொந்தமானதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு கடற்கரையில் சேதமடைந்த நிலையில் கரையொதுங்கிய படகு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படகானது இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்களுக்குச் சொந்தமானது என கண்டறியப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு செய்தியாளர் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
ஜன. 01 07:00

உதவி வழங்கச் சென்றோருக்கு இடையூறு விளைவித்த கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை

(கிளிநொச்சி, ஈழம்) கிளிநொச்சியில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்காகச் சென்ற பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து அரச வாகனத்தை தடுத்து நிறுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவரையும் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணைகளில் செல்லுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிச. 31 23:07

தமது நிலங்களிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு இராணுவ முகாம் முன்பு மக்கள் போராட்டம்

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கை இராணுவத்தினால் சர்வதேச நாடுகளின் துணையுடன் நிகழ்த்தப்பட்ட இனஅழிப்புப் போரைத் தொடர்ந்து இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி பேராட்டத்தில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு - கேப்பாபுலவு மக்களது போராட்டம் 2 வருடங்களை அண்மிக்கவுள்ள நிலையில், தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இவ்வருடமும் பொய்த்துப் போயுள்ளதாகவும், தமது பூர்வீக நிலங்களிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறும் வலியுறுத்தி 2018 ஆம் ஆண்டின் இறுதி நாளான இன்று கேப்பாபுலவு பிரதான பாதுகாப்பு படைத்தலைமையகம் முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
டிச. 31 21:59

பிரதம பிராந்திய முகாமையாளரை இடமாற்றுமாறு வலியுறுத்தி தொழிற்சங்கப் போராட்டம்

(மன்னார், ஈழம்) இலங்கைப் போக்குவரத்து சபையின் வடபிராந்தியத்தின் பிரதம பிராந்திய முகாமையாளரை இடமாற்றுமாறு வலியுறுத்தி, வடபிராந்தியத்தில் கடமையாற்றும் ஏழு சாலை ஊழியர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 4 ஆம் திகதி தொழிற்சங்கப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிச. 31 12:13

ஐக்கிய தேசியக் கட்சியைத் தாங்கிப்பிடிக்கும் தமிழ்க் கூட்டமைப்பு அவர்களின் காலத்திலேயே மக்களுக்கான தீர்வைப் பெற வேண்டும்

(கிளிநொச்சி, ஈழம்) அரசியல் நெருக்கடியில் தத்தளித்த இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தை தாங்கிப் பிடித்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு முழுமையான ஆதரவை வழங்கி அவர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களது உரிமைகளைப் பெற்றுக்கொடுக்காவிட்டால், பின்னர் ஒருபோதும் அவர்களால் அதனைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். வருட இறுதி நாளான இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
டிச. 31 09:59

மாணவர்களைப் பல்கலைக்கழகங்களுக்கு இணைக்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கையில் தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவலை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.
டிச. 30 16:03

இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து சம்பந்தனை நீக்க மகிந்த தரப்பு கடும் முயற்சி

(யாழ்ப்பாணம், ஈழம் ) மகிந்த ராஜபக்சவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என மகிந்த தரப்பு அணியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதால், சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாதென மூத்த உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன மைத்திரிபால சிறிசேனவிடம் கூறியுள்ளார். மகிந்த ராஜபக்சவே எதிர்க்கட்சித் தலைவர் என சபாநாயகர் கரு ஜயசூரிய கடந்த நாடாளுமன்ற அமர்வில் அறிவித்துள்ள நிலையில் அந்தப் பதவி தொடர்பாக தொடர்ந்தும் கேள்விக்குட்படுத்த வேண்டிய அவசியம் இல்லையெனவும் தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளார்.
டிச. 30 13:53

நள்ளிரவில் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவது மோசமான செயற்பாடு - இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாடசாலை மாணவர்களது பரீட்சைப் பெறுபேறுகளை நள்ளிரவில் வெளியிடுவது மிகவும் மோசமான ஒரு செயற்பாடு எனத் தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கம், இந்த செயற்பாடு மாற்றியமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
டிச. 29 23:49

சுமந்திரன் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை நியாயப்படுத்துகிறார்- புதிய வரைபு வெளிவரும் என்கிறார்

(யாழ்ப்பாணம், ஈழம் ) நவம்பர் மாதம் ஏழாம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த புதிய அரசியல் யாப்பு வரைபைத் தடுக்கும் நோக்குடனேயே மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் யாப்பு மீறப்படும் போது பாதிக்கப்படுவது தமிழ் மக்கள். ஆகவே யாப்பு மீறப்படும் சந்தர்ப்பங்களில் அதனை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்குரியது என்றும் சுமந்திரன் கூறினார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டில் இன்று சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளித்த அவர், 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களில் பல விடயங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.