செய்தி: நிரல்
பெப். 13 23:16

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார் சந்திரிக்கா - சமகால அரசியல் பற்றி இருவரும் உரையாடினர்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சியமைப்பார் என இந்தியா எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் பீரிஸ் கூறியுள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இன்று புதன்கிழமை இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்து உரையாடியுள்ளார். புதுடில்லியில் உள்ள இந்தியப் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் எதுவும் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை. ஆனால் சந்திப்பு நடைபெற்றதாக சந்திரிக்காவின் ஊடகத் தொடர்பாளர் கொழும்பில் கூறியுள்ளார்.
பெப். 13 09:13

மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு - இன்று கடும் காற்று வீசும் என்பதால் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நிலவும் கடல் கொந்தளிப்பு காரணமாக கடற்றொழில் நடவடிக்கைககள் முற்றாக சீர்குலைந்துள்ளதுடன் இன்றும் இந்த நிலை தொடரும் என்று மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக வளிமண்டலத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதுடன் இன்று புதன்கிழமை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் காற்றுடனான காலநிலை காணப்படும் எனவும் கடும் காற்று வீசும் எனவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெப். 13 08:35

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி அமைக்கும் பணி நிறைவு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு போரின் போது அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்கள் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி அமைப்புப் பணி இறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவுத்தூபி அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பெப். 12 23:33

பொறுப்புக்கூறல் தொடர்பாக ஜெனீவாவுக்கு விளக்கமளிக்கும் இலங்கை அரசாங்கம்- மீண்டும் வாக்குறுதி

(வவுனியா, ஈழம் ) ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்டப் பிரதிநிதிகளை சந்தித்து விளக்கமளித்து வருகின்றது. ஜெனீவா மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள், உயர் அதிகாரிகளுடனும் சந்திப்பு இடம்பெறுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனீவா மனித உரிமைச் சபையின் சட்டப்பிரிவுத் தலைவர் மோனா ரிஷ்மவி (Mona Rishmawi) மற்றும் உயர் அதிகாரிகளை நீதியமைச்சர் தலதா அத்துகோரள சந்தித்து உரையாடியுள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பில், மனித உரிமைகளை பாதுகாக்கும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றம் அடைந்து வருவதாக அமைச்சர் தலதா அத்துகோரள கூறியுள்ளார்.
பெப். 12 11:45

யாழ் நாயன்மார்க்கட்டில் உள்ள வீடொன்றில் முகமூடி நபர்கள் தாக்குதல்- பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணம் நல்லூர் நாயன்மார்கட்டு நாயன்மார் வீதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்றுத் திங்கட்கிழமை பிற்பகல் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைப் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டவேளை பொலிஸாருக்கு அறிவித்தபோதும் பொலிஸார் உடனயாக சம்பவ இடத்திற்குச் செல்லவில்லையென பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். முகங்களை மூடிக் கட்டியவாறு வாள்களுடன் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் தாக்குதலை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹையஸ் வாகனம் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளது.