(யாழ்ப்பாணம், ஈழம் )
இலங்கை அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக சீனாவிடம் இருந்து நிதியைப் பெற்றுள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக, 989 மில்லியன் டொலர் இலகு கடனை வழங்கும் உடன்பாட்டில் சீனாவும், இலங்கையும் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திட்டுள்ளது. இலங்கை நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில், இலங்கை நிதியமைச்சின் செயலாளர் சமரதுங்கவும், சீன எக்சிம் வங்கி சார்பில், இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவானும் கைச்சாத்திட்டனர். சீனாவின் எக்சிம் வங்கி இந்த நிதியுதவியை வழங்குகின்றது. மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதற்கட்டமான, கடவத்த தொடக்கம் மீரிகம வரையான பகுதியில் பணிகளை மேற்கொள்வதற்கு, 1.164 பில்லியன் டொலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.