ஏப். 23 14:20
(யாழ்ப்பாணம், ஈழம் )
இலங்கையின் தலைநகர் கொழும்பு அதன் புநகர் பகுதியான நீர்கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களையடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் ஒன்பது பாகிஸ்தானியர்களும், மூன்று இந்திய முஸ்லீம்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அதிரடிப்படையினர் நேற்றுத் திங்கட்கிழமை பிற்பகல் நடத்திய தேடுதல் சோதனை நடவடிக்கைகளின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தொழிற்சாலை செப்பு வயர் தொழிற்சாலை என்ற பெயரில் இயங்கியதாகவும் ஆனால் அங்கு குண்டுகளே தாயரிக்கப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது. தகவல் ஒன்றை அடுத்து அங்க சோதனை நடத்திய இலங்கை விசேட அதிரடிப்படையினர், தொழிற்சாலையை மூடியுள்ளனர்.