கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
நவ. 28 08:27

ஐ.நா ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் கொழும்பில் - சீனத் தூதுவர் மகிந்த தரப்புடன் சந்திப்பு

(முல்லைத்தீவு, ஈழம்) ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமரான பின்னர் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் இலங்கை அரசியல் நெருக்கடி குறித்து பிரதான அரசியல் கட்சிகளுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசி வருகின்றன. ஜனநாயக மீறல் எனவும் இலங்கை அரசியல் யாப்புக்கு அமைவாக பிரதான அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டும் என்றும் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் வலியுறுத்தி வருகின்றனா். அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் உரையாடியுமுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்து மைத்திரி விளக்கமளித்துமுள்ளார்.
நவ. 26 22:50

அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய ஏழு நீதியரசா்கள் நியமிக்கப்பட்டமை எந்த அடிப்படையில்?

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான இலங்கை வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய இலங்கை ஒற்றையாட்சி அரசின் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான ஏழு நீதியரசர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களை பிரதம நீதியரசர் நளின் பெரேரா வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஏனைய அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவாகவே தாக்கல் செய்திருந்தன. ஆனால் அரசியல் நெருக்கடி விவகாரமாகக் கருதி உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வாக விசாரணையை நடத்துமாறு கோரி முன்னாள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் இடையீட்டு மனு ஒன்றை கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தார்.
நவ. 22 21:16

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை புதுப்பிப்பது குறித்து அமெரிக்கத் தூதுவர் மகிந்தவின் அதிகாரியுடன் சந்திப்பு

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மைத்திரி மகிந்த தரப்பையும் ரணில் தரப்பையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களையும் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளும் அமெரிக்கா இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்களும் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் சந்தித்து வருகின்றனர். இலங்கை முப்படையினருடன் கூட்டுப் பயிற்சி பாதுகாப்பு, தொழில்நுட்ப உதவி மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட தங்களுக்குரிய பூகோள அரசியல் தேவைகளுக்கு ஏற்ப இந்தச் சந்திப்புக்கள் இடம்பெற்று வருவதாக கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் உள்ளிட்ட தூதுவர்கள் சந்தித்திருந்தனர்.
நவ. 20 22:22

தமிழர் தேசம் அபகரிக்கப்படும் நிலையில் வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து ரணிலுக்கு ஆதரவாகப் பேசினார் சம்பந்தன்

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் 15 பேரைச் சந்தித்து இலங்கை அரசியல் நெருக்கடி தொடர்பாக கலந்துரையாடியுள்ளது. கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சம்பந்தன் தலைமையில் சந்திப்பு இடம்பெற்றது. கூட்டமைப்பின் பேச்சாளரும் ரணில் விக்கிரமசிங்கவி்ன் ஜனநாயக உரிமை மீறலுக்கு எதிராக செயற்பட்டு வருபவருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பு உறுப்பினா்கள் அனைவரும் சந்திப்பில் கலந்துகொண்டனர். கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு மகிந்த ராஜபக்ச புதிய பிரதமராகப் பதவியேற்றதால் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது என சம்பந்தன் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
நவ. 10 00:55

நாடாளுமன்றக் கலைப்பு சரியா, பிழையா- உயர் நீதிமன்றத்தின் கருத்தை சுயாதீனத் தேர்தகள் ஆணைக்குழு அறியவுள்ளது

(மன்னார், ஈழம்) இலங்கை நாடாளுமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலைக்கப்பட்டமை அரசியல் யாப்பின் 19 ஆவது திருத்தத்திற்கு அமைவானதா என்பது குறித்து இலங்கை சுயாதீன தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இலங்கை உயர் நீதிமன்றத்தின் கருத்தைக் கோரவுள்ளார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறு முடிவு செய்துள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. மஹிந்த ராஜபக்ச தரப்பு பொரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு மைத்திரிபால சிறிசேன இலங்கை அரச வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளமை அரசியல் யாப்பு விதிகளை மீறும் செயல் என குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிகின்றது.