(கிளிநொச்சி, ஈழம்)
நாட்டில் கடும் வரட்சி நிலவிவரும் நிலையில், கிளிநொச்சி மாவட்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மூலம் பதினேழு கிராம அலுவலர் பிரிவுகளில் குழாய் மூலம் வழங்கப்பட்டு வருகின்ற குடிநீர் விநியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட பொறியியலாளர் என்.நவரூபன் தெரிவித்தார். இரணைமடுக் குளத்தில் இருந்து இடதுகரை வாய்க்கால் மூலம் கிளிநொச்சி குளத்திற்கு நீர் பெறப்பட்டு அங்கிருந்து எடுக்கப்படுகின்ற நீர் சுத்திகரிக்கப்பட்டு, பதினேழு கிராம அலுவலர் பிரிவுகளில் குழாய் மூலம் குடிநீர் விநியோகமும், பல கிராமங்களுக்கு நீர்த்தாங்கிகள் மூலமும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.