நிரல்
டிச. 03 20:08

வடமாகாணத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலம்

தமிழர் தாயகம் வடமாகாணத்தில் புரவி புயல் தாக்கத்தினால் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டு மீள் குடியேறிய மக்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 37ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப மதிப்பீடுகள் கூறுகின்றன. யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை ஒன்பதாயிரத்து 346 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 703 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா கூறுகிறார். பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாமெனவும் முழுமையான மதிப்பீடுகள் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
டிச. 02 14:46

இலங்கை அரசு விடுதலைப் புலிகளை ஐ.நா. பயங்கரவாத பட்டியலில் சேர்க்கவேண்டும் என்கிறார் குணரட்ணா

(வவுனியா, ஈழம்) ஜே.வி.பியின் முடக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தைப் போல் அல்லாமல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீளுருவாக்கப்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக அவ்வியக்கத்தின் தலைவர் வே பிரபாகரன் அவர்களைப் போற்றுகின்ற மரபு புலம்பெயர் தமிழர்களாலும் அமைப்புகளாலும் முன்னெடுக்கப்படுவதால், இலங்கைத் தீவுக்குள்ளும் அடுத்த தலைமுறையினர் தீவிரமயமாக்கப்படும் வாய்ப்பு அதிகமாகியிருப்பதாகவும், அதனால் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 1373 ஆம் தீர்மானத்துக்குள் அவ்வியக்கத்தை உட்படுத்தி உலகளாவியரீதியில் பயங்கரவாத பட்டியலில் சேர்த்துவிடுவதற்கு இலங்கை அரசு உடனடியாக ஆவன செய்தாக வேண்டும் என்று சிங்களவரும் பிரபல பயங்கரவாத பேராசிரியருமான றொஹான் குணரட்ணா தெரிவித்துள்ளார்.
நவ. 29 20:26

நினைவுத் திறத்தை நிலைநாட்ட ஈழத் தமிழர்களுக்கு வினைத்திறன் தேவை

(வவுனியா, ஈழம்) மாவீரர் நாளைப் பகிரங்கக் கூட்டு நினைவெழுச்சியாக இல்லாது மாற்றிவிடவேண்டும் என்று இலங்கை ஒற்றையாட்சி அரசு கங்கணம் கட்டி நிற்கிறது. நினைவேந்தலை நீர்த்துப்போகச்செய்யும் இந்தச் செயற்பாட்டில் உலக, பிராந்திய வல்லாதிக்கங்களும் இணைந்துள்ளன. பல தரப்புகளால் பல அடுக்குகளில் நகர்த்தப்படும் இந்த நகர்வுகளை ஈழத்தமிழர்கள் உணர்வுரீதியான முனைப்புகளூடாக மட்டும் முறியடித்துவிடமுடியாது. தர்க்கீக அடிப்படையில் நினைவுத்திறத்தை (memorialisation) முன்னெடுக்கவேண்டும். இதைச் செய்வதில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு முக்கியமான பொறுப்பு இருக்கிறது. இந்தப் பொறுப்பை மாவீரர் நினைவு நாளில் இவர்கள் சரிவரச்செய்திருக்கிறார்களா என்பதை உணர்வுத் தளத்துக்கு அப்பால் அறிவுரீதியாக ஆராயவேண்டியிருக்கிறது.
நவ. 27 22:47

முப்படையினரின் அச்சுறுத்தல், தடைகளுக்கு மத்தியில் மாவீரர் நாள் நினைவேந்தல்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் முப்படையினரின் தடைகளுக்கு மத்தியிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை மக்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.05க்கு சுடரேற்றி உணர்வுபூர்வமாக அனுஷ்டித்துள்ளனர். சைவக் குருமார், அருட்தந்தையர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இராணுவத்தின் கடுமையான அச்சறுத்தல்களுக்கு மத்தியில் தங்கள் இல்லங்கள், அலுவலகங்கள், பொதுக் கட்டங்களுக்கு முன்பாக சுடரேற்றினர். இதேவேளை, யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள மார்ட்டீனார் குருமடத்துக்கு முன்பாக சுடரேற்றிய குற்றச்சாட்டில், அந்தக் குருமடத்தின் பணிப்பாளர் அருட்தந்தை பாஸ்கரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை இரவு அருட்தந்தை கைது செய்யப்பட்டதாக யாழ் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.
நவ. 24 00:58

ட்ரம்பின் பதவி முடிய முன்னர் இஸ்ரேலைப் பலப்படுத்தும் பொம்பியோ

(வவுனியா, ஈழம்) அமெரிக்கா தம் மீது தாக்குதல் நடத்தினால் பயங்கரமான பதிலடி கொடுப்போம் என்று ஈரான் கடந்த புதன்கிழமை கூறிய நிலையில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ ஆகியோர் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானை இரகசியமாக ஞாயிற்றுக்கிழமை சந்தித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் கசிந்துள்ளன. சவுதி உயர்மட்டம் உத்தியோகபூர்வமாக இதை மறுத்துள்ளபோதும் இஸ்ரேல் அமைச்சர் ஒருவர் இதை உறுதிப்படுத்தியுள்ளார். பதவி முடிவை எதிர்நோக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் அவரின் இராஜாங்கச் செயலர் பொம்பியோவும் விட்டுச்செல்லும் வெளியுறவுத் தெரிவுகள் பாலஸ்தீனர்களையும் ஈழத்தமிழர்களையும் எவ்வாறு எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் பாதிக்கப்போகின்றன என்ற கேள்வி இத்தருணத்தில் எழுவது நியாயமானதே.
நவ. 21 22:47

முப்படையினருக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீட்டு- பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி அரசாங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையமாகக் கொண்ட இந்த அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கு 35ஆயிரத்து 515 கோடியே 91 இலச்த்து 50ஆயிரம் ருபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வரவு செலவுத் திட்டம் இன்று சனிக்கிழமை மாலை இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
நவ. 10 22:56

பைடன் நிர்வாகம் கோட்டாபய அரசாங்கத்தை அரவனைக்கும்- இந்தியப் பத்திரிகையாளர் பாலச்சந்திரன்

(வவுனியா, ஈழம்) கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துடன் அமெரிக்க அரசாங்கம் இறங்கிச் செல்லுமெனவும் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த இலங்கையை அரவனைக்க வேண்டியதொரு தேவை அமெரிக்காவுக்கு உண்டெனவும் எமது கூர்மைச் செய்தித்தளம் தொடர்ச்சியாகச் செய்திக் கட்டுரைகளை எழுதிவருகின்றது. கடந்த 28ஆம் திகதி கொழும்புக்கு வந்து சென்ற அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைப் பொம்பியோ ஒற்றை ஆட்சி இலங்கையை ஆரத்தழுவிச் சென்றிருக்கிறாரெனவும் கூர்மைச் செய்தித் தளத்தில் கட்டுரை ஒன்று பிரசுரமாகியிருந்தது.
நவ. 06 21:46

கொழும்புத் துறைமுக கிழக்குக் கொள்கலன் முனைய அபிவிருத்தியும் இந்தியாவும்

(வவுனியா, ஈழம்) அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் குழறுபடிகளுக்கு மத்தியில் எவர் பதவியேற்றாலும் இந்தியாவைப் பொறுத்தவரை பெரியளவில் மாற்றங்கள் இருக்காது. ஏனெனில் இந்தோ- பசுபிக் பிராந்திய அமெரிக்க நலன் சார்ந்த விடயங்களைச் சாதகமாகப் பயன்படுத்தியே தென் ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு உண்டு. அத்துடன் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் இந்தோ- பசுபிக் பிராந்தியச் செயற்பாடுகள் என்பது அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள், தீர்மானம் எடுப்பவர்களின் கைகளிலேயே உண்டு. ஆகவே யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆசியப் பிராந்தியச் செயற்பாடுகளில் மாற்றங்கள் இருக்காதென்றே கூறலாம்.
நவ. 01 22:07

ஈழப் போராட்டத்திற்கு உதவிய கொட்டகலை மேரியம்மா காலமானார்

(வவுனியா, ஈழம்) கொழும்பில் 1991ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுத் தாக்குதலைத் திட்டமிட்ட வரதன் என்பவருக்கு அடைக்கலம் கொடுத்திருந்த ஜேக்கப் மேரியம்மா (மேரி அக்கா) நேற்றுச் சனிக்கிழமை நுவரெலியா கொட்டகலையில் தனது 81ஆவது வயதில் காலமானார். 1994ஆம் ஆண்டு மலையக மக்கள் முன்னணி என்ற தொழிற் சங்கத்தை ஆரம்பித்தவரும் அதன் தலைவருமான முன்னாள் அமைச்சர் அமரர் பெரியசாமி சந்திரசேகரன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவதற்கும் இதுவே காரணமாக இருந்தது.
ஒக். 28 23:18

ஒற்றையாட்சி இலங்கையை அமெரிக்கா ஆரத் தழுவுகிறது

(வவுனியா, ஈழம்) ஆசிய நாடுகளுக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு, இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலும், ராஜபக்ச சகோதரர்களுக்கு மிகவும் நெருக்கமான அததெரன தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலும் வரிக்குவரி இலங்கையின் இறைமை என்ற சொல்லாடலை உச்சரித்திருக்கிறார். பலமான இறைமை பொருந்திய இலங்கை உலகத்துக்குத் தேவை என்று அவர் கூறியுள்ளார். ஜனநாயகப் பண்புள்ள முழுமையான சுதந்திரமும் இறைமையுமுள்ள இலங்கையோடு நட்பைப் பலப்படுத்தவே அமெரிக்கா விரும்புகிறது என்றும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.