ஜன. 20 21:53
(வவுனியா, ஈழம்)
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் கடந்த ஒரு மாதமாகக் கலந்துரையாடி ஆவணம் ஒன்றைத் தயாரித்திருந்தன. இந்த ஆவணத்தில் கையொப்பமிடுகின்ற சர்ச்சைகள் மற்றும் தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற விடயங்களைச் சில கட்சிகள் கையாண்ட விடயம் தொடர்பாகப் பல்வேறு குற்றச்சாட்டுக்களும் நிலவுகின்றன. இவ்வாறானதொரு நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் நாளேட்டின் இனி - இது இரகசியம் அல்ல என்ற பத்தியில், முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.