நிரல்
மே 25 19:45

செல்வந்தர் ஒருவர் வில்லாம்பெருக்கு என்ற வனப்பகுதியை அழிப்பதாக முறைப்பாடு

(மன்னார், ஈழம் ) வட மாகாணம் மன்னார் மாவட்டம் மன்னார் தீவில் அமைந்துள்ள ஒலைத்தொடுவாய் வில்லாம்பெருக்கு எனும் புதர்களும் பனை மரங்களும் அடர்ந்த வனப்பகுதி, செல்வந்த தொழில் அதிபர் ஒருவரினால் கடந்த ஒரு வருடமாக சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுவரும் நிலையில், உயிரியலாளர்களோ சூழலியலாளர்களோ அதையிட்டுக் கவனம் செலுத்தாதவில்லையென விசனம் தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு பிரதேச அரசியல்வாதிகளும் மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த செல்வந்தரின் சட்டவிரோத காடழிப்புத் தொடர்பாக மௌனமாக உள்ளதாக ஒலைத்தொடுவாய் தமிழ் கிராமத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கவலை வெளியிட்டனர்.
மே 24 21:09

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வேண்டுகோள்

(வவுனியா, ஈழம்) தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பாக கட்சி, கொள்கை பேதம் கடந்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத் தரப்புடன் பேசியுள்ளமை எமக்கு ஒரு சிற்றாறுதலைத் தருவதாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளை சேர்ந்த 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் அயலுறவுத்துறை அமைச்சரும் சிரேஸ்ட அரசியல் வாதியுமான தினேஸ் குணவர்த்தனவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையினை மேற்கொண்டுள்ளார்கள்.
மே 22 19:42

றிஷாட் பதியுதீன் ஆதரவாளர்கள் மீது பொலிஸார் விசாரணை

(மன்னார், ஈழம் ) முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இளைய சகோதரருமான ரிப்ஹான் பதியூதீன் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முகம்மது முஜாஹித் மற்றும் மாந்தை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் முகம்மது ஹனிபா முகம்மது தௌபீக் உட்பட நால்வருக்கு எதிராக மன்னார் அடம்பன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாந்தை பிரதேச சபையின் அங்கம் வகிக்கும் பெண் உறுப்பினர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூர்மைச் செய்தி தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
மே 21 20:58

பெண் உறுப்பினரைக் கடத்தியும் வெகுமதிகள் வழங்கப்பட்டும் அச்சுறுத்தியும் கைப்பற்றப்பட்ட மாந்தை மேற்கு பிரதேச சபை

(மன்னார், ஈழம் ) வட மாகாணம் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இராமநாதன் வவுனியன் ஆதி அருணாசலம் தெரிவாகியுள்ளார். இவ்வாறான நிலையில் மாந்தை மேற்குப் பிரதேச சபையின் நிர்வாகத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மீண்டும் கைப்பற்றியுள்ளது. எனினும் குறித்த தவிசாளர் தெரிவில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரைக் கடத்தியும், சபையின் உறுப்பினர்கள் சிலருக்கு பண வெகுமதிகள் வழங்கியும், சில உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுத்தும் ஜனநாயகத்திற்கு முரணாக, அநீதியான முறையில் குறித்த பிரதேச சபை நிர்வாகம் கைப்பற்றப்பட்டிருப்பதாக பிரதேச சபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.
மே 19 20:58

தாராபுரத்தில், கொவிட் 19 தொற்றாளர்களுக்குப் புதிய வைத்தியசாலை

(மன்னார், ஈழம் ) வட மாகாணம் மன்னார் மாவட்டம் தாராபுரம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள "துருக்கி சிட்டி" பகுதியில் உள்ள பாடசாலைக் கட்டிடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொவிட் 19 தொற்றாளர்களுக்கான சிகிச்சை மையம் இன்று 19 ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் செயற்பட ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் முதற் கட்டமாக பெண் கொவிட் தொற்றாளர்களே குறித்த சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மேல் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
மே 18 20:40

தடைகளை உடைத்து நந்திக் கடலில் துணிவோடு வணக்கம் செலுத்திய சிவாஜிலிங்கம்- ஒளித்தோடிய தமிழ்த்தேசியக் கட்சிகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை அரசாங்கமும் அதன் முப்படையினரும் கொவிட் 19 நோய்ப்பரவலைக் காரணம்கூறிப் பல தடைகளை விதித்தபோதும். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மாத்திரமே துணிவோடு முல்லைத்தீவு நந்திக் கடலுக்குச் சென்று தீபம் ஏற்றி இறுதிப் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கும், உயிரிழந்த போராளிகளுக்கும் வணக்கம் செலுத்தினார். தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் உள்ள தமது அலுவலகத்தில் மாத்திரம் தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தினர். ஆனால் நாடாளுமன்றத்தின் சபா மண்டபத்தில் தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தவில்லை. அத்துடன் சபைக்குள்ளும் எதிர்ப்புகளை வெளியிடாமல் தமது ஆசனங்களில் அமைதியாகக் கறுப்பு உடைகளோடு அமர்ந்திருந்தனர்.
மே 16 20:38

பயணக் கட்டுப்பாடு- தமிழர் பிரதேசங்களும் முடங்கியது

(வவுனியா, ஈழம்) இலங்கை அரசாங்கத்தினால் கொவிட் -19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாடளாவியரீதியில் அமுல்படுத்தப்பட்ட போக்குவரத்துத் தடை காரணமாக தமிழர் தாயகத்தின் வட மாகாணம் கடந்த இரண்டு நாட்களாக முற்று முழுதாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. மேற்படி போக்குவரத்துத் தடை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய வட மாகாண மாவட்டங்கள் முற்றாக செயலிழந்த நிலையில் குறித்த மாவட்டங்களில் வாழும் பல லட்சம் தமிழ் பேசும் மக்கள் தமது வீடுகளில் முடங்கியுள்ளனர்.
மே 14 17:17

அரசாங்கத்தின் மீது பகிரங்கக் குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) இலங்கையில் தற்போது ஆட்சி செய்யும் ராஜபக்ச அரசாங்கம் தமிழ் இனத்தை தொடர்ச்சியாக அடக்கி ஆள நினைப்பதன் வெளிப்பாடுதான் முள்ளிவாய்கால் நினைவேந்தல் முற்றத்தில் நினைவு தூபிகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டிருந்த தீபம் ஏற்றும் தூண்களைச் சேதப்படுத்திய நிகழ்வாகும். இச்சம்பவத்தை தான் மிக வன்மையாகக் கண்டிப்பதாக வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 13 22:45

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முடக்கும் அதேவேளை குருந்தூர் மலையை ஆக்கிரமிக்கும் முனைப்பு

(மன்னார், ஈழம்) தமிழ் இன அழிப்பின் அழியா அடையாளமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை ஈழத்தமிழர்கள் நினைவுகூருவதற்கு இலங்கை ஒற்றையாட்சி அரசு தனது பொறிமுறைகளூடாகவும் இராணுவத்தின் ஊடாகவும் தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் கொவிட் -19 விதிகளையும், நடைமுறைகளையும் பேணி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தினாலும், அது தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையின் தமிழர் பகுதியான முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலைப்பகுதியில் கடந்த செவ்வாய் அன்று இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் முழு ஆதரவோடு கொவிட் -19 விதிமுறைகள் மீறப்பட்டு பௌத்த விகாரை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மே 13 20:43

புதிய அரசியல் அணியை உருவாக்கும் முயற்சியில் விமல் வீரவன்ச

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்த்து வைப்பது தொடர்பாக பௌத்த குருமாரை மையப்படுத்திய உயர்மட்டக்குழு ஒன்றின் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்திருப்பதாகக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன என்ற கூட்டணியில் இருந்து விலகி வேறொரு புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்கிச் செயற்படுவதே விமல் வீரவன்ச போன்ற சில உறுப்பினர்களுடைய பிரதான நோக்கம் எனவும் இதனால் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுக்குள் ஏற்படவுள்ள பிளவுகளைத் தடுக்க முடியாதெனவும் சமதான முயற்சியில் ஈடுட்ட பௌத்த பிக்குமார் சிலர் கூறுகின்றனர்.