நிரல்
ஏப். 30 10:56

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் பொறுக்கூறவில்லை- உறவினர்கள் ஆதங்கம்

(மன்னார், ஈழம்) இலங்கைத்தீவின் தமிழர் தாயகப் பகுதியில் காணாமல் போன எமது அன்புக்குரிய உறவுகளை மீட்டுத்தருமாறு தொடர்சியாகப் போராடிவரும் நிலையில் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் ஜனாதிபதியும், பிரதமரும் அதையிட்டு அலட்டிக்கொள்ளாமல் வெறுமனே அவர்களின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றனர். இதன்மூலம் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவருக்கும், காதுகள் மந்தமாகியுள்ளதுடன், கண்களும் பார்வையிழந்து குருடாகிவிட்டது என்றே, கருதவேண்டியுள்ளதாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி திருமதி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.
ஏப். 29 19:48

காலிமுகத்திடல் போராட்டத்தில் அரசியல் கட்சிகளுக்குத் தடை

(முல்லைத்தீவு) எதிர்வரும் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை மே தினம் அன்று நடைபெறவுள்ள அரசியல் கட்சிகளின் பேரணிகள, பாதயாத்திரைகள் எதுவும் காலி முகத்திடலில் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்துடன் இணைய முடியாதென போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் அறிவித்துள்ளனர். அரசியல் கட்சிகளின் கலப்புகள் இன்றி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் என்பதால். மே தினம் அன்று கொழும்பில் ஊர்வலம், பேரணிகள் நடத்த நடத்தவுள்ள அரசியல் கட்சிகள் எந்தவொரு காரணம் கொண்டும் காலிமுகத்திடலுக்கு வரக்கூடாதென அறிவுறுத்தியுள்ளனர்.
ஏப். 28 10:48

முரண்பாடுகள் அதிகரிக்கின்றதா? அமைச்சர்களும் மோதல்

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் சுமூகமாகத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையச் செய்திகள் கூறுகின்றன. இன்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூத்த உறுப்பினர் டளஸ் அழிகபெருமா உள்ளிட்ட சிலருடன் முரண்பட்டனர். ஆனால் மகிந்த ராஜபக்ச தலையிட்டு அதனைத் தடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஏப். 27 22:12

இலங்கைத்தீவில் நாளை பணிப் பகிஸ்கரிப்பு- கன்டி பாதயாத்தரை கொழும்பை வந்தடைகின்றது

(யாழ்ப்பாணம், ஈழம்) கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தித் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நாளை வியாழக்கிழமை இலங்கைத்தீவு முழுவதிலும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் நிறுவனங்கள். வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்படுமென தொழிற் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கன்டியில் ஆரம்பித்த பாதயாத்திரை நாளை கொழும்பை வந்தடைகின்றது. இதற்கு ஆதரவாகவே பணி பகஸ்கரிப்புப் போராட்டமும் நாளை நடைபெறவுள்ளது.
ஏப். 26 22:21

உலக வங்கி 600 மில்லியன் வழங்க இணக்கம்

(வவுனியா, ஈழம்) தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பாக கொழும்பில் உள்ள உலக வங்கி அதிகாரிகள் குழு ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துள்ளது. உதவித் தொகையாக அறுநூறு மில்லியின் அமெரிக்க டொலர் வழங்கப்படுமென உலக வங்கி அதிகாரிகளினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக முதற்கட்டமாக நாநூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுமென உலக வங்கியின் இலங்கைக்கான கொழும்பில் உள்ள நிரந்தரப் பிரதிநிதி சியோ கண்டா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கொள்பிட்டியில் உள்ள ஜனாதிபதி செயலகம் இன்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏப். 25 13:12

அரசாங்கமும் எதிர்க்கட்சியும் அதிகாரங்களை இடம் மாற்றும் சதுரங்க விளையாட்டில்

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு போன்றவற்றால் பல பிரச்சினைகளை எதிர்கொண்ட பின்னரும்கூட சிங்கள அரசியல் கட்சிகள், இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தில் அக்கறை செலுத்தவில்லை. மாறாக இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றியமைத்தல் மற்றும் 20ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்து 19ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் புதுப்பித்து 21 ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளிலேயே கவனம் செலுத்துகின்றன. அதாவது மக்கள் எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளைச் சாதகமாக்கி அரசாங்கமும் எதிர்க்கட்சியும் அதிகாரங்களை அப்படியே இடம்மாற்றுகின்ற சதுரங்க விளையாட்டில் (Playing chess) ஈடுபடுகின்றன. மக்களின் வாழ்வாதாரப் போராட்டம் கவனத்தில் எடுக்கப்படவில்லை.
ஏப். 24 09:59

வடக்குக் கிழக்கு மக்கள் ஏன் பங்கெடுக்கவில்லை?

(வவுனியா, ஈழம்) கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, மற்றும் விலைவாசி உயர்வு நெருக்கடிகளினால், சிங்கள மக்கள் அரசாங்கத்துக்கு எதிராகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்ற மார் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பித்த எதிர்ப்புப் போராட்டம், தற்போது தீவிரமமைடந்து வரும் நிலையில். வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள், சிங்கள மக்களின் போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் பல கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ச்சியாகக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
ஏப். 23 20:53

விசாரணைகளின் உண்மைத் தன்மை என்ன?

(மன்னார், ஈழம்) இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்று இன்று 21 ஆம் திகதியுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இதையடுத்து இன்று நாடெங்கிலும் இச்சம்பவத்தில் பலியானவர்களின் ஆத்ம சாந்திவேண்டி பல ஆலயங்களில் ஆராதனைகள் நடைபெற்றுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்படல் வேண்டும் எனும் கோரிக்கைகள், கடந்த சில மாதங்களாக, நாடளாவிய ரீதியில் வலுப்பெற்று, ஓங்கி ஒலித்த நிலையில் மேற்படி கோஷங்கள் யாவும் தற்பொழுது வலுவிழந்து அநேகராலும் மறக்கப்பட்ட ஒன்றாகவுள்ளது.
ஏப். 22 22:37

நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதில் தாமதம்

(முல்லைத்தீவு) கோட்டபாய வீட்டுக் போக வேண்டுமென வலியுறுத்தி இளைஞர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்கி நாடாளுமன்றத்திடம் அதிகாரங்களை ஒப்படைப்பது தொடர்பாகத் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. பிரதமர் மகிந்த ராஜபக்ச இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தில் உள்ள சில முக்கியமான அதிகாரங்களை உடனடியாக நாடாளுமன்றத்திற்குப் பாரப்படுத்தும் பிரேரணை ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தி மீளவும் திருத்திச் சமர்ப்பிக்கவுள்ளதாகக் கட்சித் தலைவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
ஏப். 21 21:05

கட்சித் தலைவர்கள் கூட்டம்- நிறைவேற்று அதிகாரத்தை ரத்துச் செய்வது குறித்து ஆராய்வு

(வவுனியா, ஈழம்) கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலக வேண்டுமென வற்புறுத்தி, கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தலைமையில் இடம்பெற்றது. தற்போதைய பொருளாதார மற்றும் விலைவாசி உயர்வு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. ஆனால் முடிவுகள் எதுவுமே எடுக்கப்படவில்லை. நாளை வெள்ளிக்கிழமை முக்கியமான முடிவுகளை அறிவிக்கவுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்தக் கூட்டத்தில் கூறியிருந்தார்.