(முல்லைத்தீவு)
ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையைக் கோரி நிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் திருகோணமலை தென்கையிலை ஆதின முதவர் தவத்திரு அகத்தியர் அடிகளார், அருட்தந்தை லியோ அடிகளார் ஆகிய இருவரும் முன்னிலை வகித்தனர். சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் நிகழ்வில் பங்கேற்றினர். உணர்வுபூர்வமாக இடம்பெற்ற நிகழ்வில், போரில் கொல்லப்பட்டவர்களை நினைகூர்ந்து உறவினர்கள் கதறி அழுதனர்.