செய்தி: நிரல்
பெப். 15 13:15

நந்திக்கடலில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையைக் கண்காணிக்கச் சென்றோர் மீது தாக்குதல்

(முல்லைத்தீவு, ஈழம்) இன அழிப்பு போரினால் அனைத்தையும் இழந்து தமது அன்றாட வாழ்வாதாரத்தின் ஊடாக பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பிவரும் முல்லைத்தீவு மீனவர்கள், அங்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவதாக தொடர்ச்சியாக விசனம் வெளியிட்டுவரும் நிலையில், நந்திக்கடல் நீரேரியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையைக் கண்காணிக்கச் சென்றவர்கள் மீது நேற்று வியாழக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பெப். 15 09:41

தமிழீழ விடுதலை இயக்கம் பேரவையுடன் இணைந்திருந்தால் கூட்டமைப்பு இன்று இருந்திருக்காது - செல்வம் கருத்துக்கணிப்பு

(மன்னார், ஈழம்) சர்வதேசத்தின் துணையுடன் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தினால் 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாது செய்யப்பட்டதன் பின்னரான நிலையில், தமிழ் மக்களது பிரதிநிதிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் அடுத்த தலைமைப் பதவி யாருக்கு என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளதுடன், இதற்காக பலரும் போட்டியிடுவதாக கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மாறி மாறிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில், தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்திருந்தால் கூட்டமைப்பு இன்று இல்லாது போயிருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பெப். 14 22:53

ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வுக்கு முன் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஜெனீவா மனித உரிமைச் சபை எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள நிலையில், 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்திலும் அதற்குப் பின்னரான காலத்திலும் கொல்லப்பட்ட, கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களது குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க இலங்கை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்துள்ளது. ஆனால் நஷ்டஈட்டை விட நீதி கிடைக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு என தமிழ் ஊடகவியலாளர்கள் கூறியுள்ளனர். அத்துடன் இந்த நஷ்டஈடும் உரிய முறையில் வழங்கப்படுமா என்பது குறித்தும் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளும் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கொழும்பில் உள்ள இலங்கை ஜனாதிபதி செயலக அதிகாரிகள் குழு ஒன்று நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தது.
பெப். 14 15:20

வடமாகாணத்தைச் சாட்டியே மகிந்த அரசு சர்வதேசத்திடமிருந்து கடன் பெற்றது - பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எவ்வித பலனும் இல்லை

(யாழ்ப்பாணம், ஈழம்) யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாகாணம் எனத் தெரிவித்து வடமாகாணத்தைக் காரணம் காட்டி சர்வதேசத்திலிருந்து நிதியுதவியைப் பெற்று இலங்கையின் ஏழு மாகாணங்களை அபிவிருத்தி செய்த இலங்கையின் முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்களை இதுவரை அபிவிருத்தி செய்யவில்லை என இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த நான்கு வருடங்களில் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு கிட்டத்தட்ட ஆறாயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட போதும் எந்த ஒரு பாடசாலையும் பூரணமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெப். 14 12:23

கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு மதுபானசாலைகள் மாத்திரமே உள்ளன - மாவட்ட செயலகம் தகவல்

(கிளிநொச்சி, ஈழம்) கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு மதுபானசாலைகள் மாத்திரமே உள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி கூர்மையின் கிளிநொச்சி செய்தியாளர் முன்வைத்த விண்ணப்பத்துக்கு வழங்கிய பதிலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.