(கிளிநொச்சி, ஈழம்)
தமிழினஅழிப்பு போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள போதும், போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த நிலங்களில் மீளக்குடியேற முடியாது நிலமீட்பு பேராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இலங்கையில் தஞ்சமடைந்துள்ள வெளிநாட்டு அகதிகளை வடமாகாணத்தில் தங்கவைக்கும் திட்டத்திற்கு தொடர்ந்தும் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுவருகின்றது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகளை வவுனியா பூந்தோட்டம் முகாமில் தங்கவைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நகரசபை மண்டபத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் கலந்துரையாடலொன்று இடம்பெற்றதுடன், குறித்த கலந்துரையாடலை அடுத்து குறித்த அகதிகள் வவுனியாவில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மாவட்ட அதிபருக்கான மகஜர் மேலதிக அரச அதிபர் தி.திரேஷ்குமாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.