(யாழ்ப்பாணம், ஈழம்)
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில், சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரச திணைக்களங்களில் பணிபுரிந்த அதிகாரிகள் பலரும் கைதாகியிருந்தனர். சிங்களப் பெண்களுக்குக் கருத்தடைச் சிகிச்சை செய்தார் என்ற குற்றச்சாட்டில் குருணாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் சேகு சியாப்டீன் மொஹமட் ஷாபி, இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதாகித் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் மீது குற்றம் இல்லையென, இலங்கைச் சுகாதார அமைச்சு நியமித்த மருத்துவர் குழு உறுதிப்படுத்தியுள்ளது.