ஒக். 25 21:46
(வவுனியா, ஈழம்)
தென்பசுபிக் பிராந்தியத்தில் கடலோரக் கண்காணிப்புக் கப்பல்களை நிரந்தரமாக நிலை கொள்ளச் செய்வது குறித்து அமெரிக்கா அவசரமாக ஆராய்ந்து வரும் நிலையில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க்ஸ் எஸ்ப்ர் ஆகியோர் நாளை திங்கட்கிழமை ஆசியாவுக்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளனர். நாளை மறுதினம் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வரவுள்ள இருவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உள்ளிட்ட உயர்மட்ட அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடவுள்ளனர்.