நிரல்
ஜூன் 20 14:56

அமெரிக்கா பசில் ராஜபக்ஷ ஊடாக தமிழர் தரப்புடன் இரகசியப் பேச்சு நகர்வா?

ஒரு வாரத்துக்கு முன்பதாக, கடந்த ஞாயிறன்று பரம இரகசிய இணையக் கூட்டமொன்றை பிரித்தானியாவிலிருந்து இயங்கும் உலகத் தமிழர் பேரவை எனும் அமைப்பின் பேச்சாளரான சுரேன் சுரேந்திரன் கூட்டினார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான திரு எம். ஏ. சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டிருக்கிறார். அந்தக் கூட்டம் என்ன விடயம் பற்றியது தெரியுமா? அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் மறைமுக ஒழுங்கில் பசில் ராஜபக்ஷவுடன் தமிழர் தரப்பு பேச்சுவார்த்தை நடாத்தி ஓர் உடன்பாட்டுக்கு வருவது தொடர்பானது. அதேவேளை இந்தியாவும் புலம்பெயர் சமூகத்துக்குள் 'மறுசீரமைப்பு' என்ற பெயரில் ஊடுருவுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
ஜூன் 19 21:13

மன்னார் கடற்கரையில் ஒதுங்கும் இந்திய மருத்துவக் கழிவுகள்

(மன்னார், ஈழம் ) இலங்கை வட மாகாணம் மன்னார் மாவட்டக் கடற்கரைகளில் இந்தியா நாட்டின் மருத்துவக் கழிவுகள் கரையொதுங்குவதாக மீனவ ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அந்தோணி பெனடிற் குரூஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். ஏலவே கொழும்பில் தீ விபத்திற்கு உள்ளான எம். வி எக்ஸ்பிரஸ் பேர்ல் (MV- X Press Pearl) சரக்கு கப்பலில் இருந்து கடலில் மூழ்கிய பிளாஸ்ரிக் மூலப்பொருட்கள் மற்றும் நச்சுத்தன்மையுடைய இரசாயனப் பொருட்கள் மன்னார் மாவட்டக் கடற்கரைகளின் பல இடங்களிலும் கரையொதுங்கி கடற்கரைகள் மாசடைந்து வரும் நிலையில் தற்போது இந்தியா நாட்டின் மருத்துவக் கழிவுகளும் கரையொதுங்கி மன்னார் மாவட்ட கடற்கரைப் பகுதிகளை மேலும் மாசடையச் செய்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்
ஜூன் 18 21:42

13 ஆவது திருத்தச் சட்டத்திற்குரிய அதிகாரங்கள் மீள பெறப்படுகின்றன

(வவுனியா, ஈழம்) பல்லாயிரக்கணக்கான உயிர் தியாகத்தினால் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு ஆட்சிக்கு வரும் இலங்கை சிங்களப் பேரினவாத அரசுகள் தொடர்ந்து மறுத்துவரும் நிலையில் தற்பொழுது மாகாண சபைகளுக்கு உள்ள கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளின் அதிகாரங் களையும் பறித்தெடுப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுப்ப தாகத் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் செயலாளரும் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அ. சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஜூன் 18 19:59

கடற்பரப்பில் பழைய வாகனங்கள் அமிழ்த்தப்படுவதற்கு தமிழக மீனவர்கள் எதிர்ப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்தியா இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், இலங்கை கடற்றொழில் திணைக்களத்தினால் இலங்கை கடற்பரப்பில் கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளினால் தமது மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அதனைக் கண்டித்தும் இவ்விடயத்தில் இந்தியா மத்திய அரசாங்கம் நேரடியாக தலையீடு செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தும் கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இராமேஸ்வரம் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தின் முன்பாக கடந்த புதன்கிழமை காலை நடைபெற்ற மேற்படிக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இராமேஸ்வரம் மற்றும் அதன் அருகில் உள்ள மீனவக் கிராமங்களைச் சேர்ந்ந பெரும் எண்ணிக்கையான மீனவர்கள் பல்வேறு வாசகங்களைக் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.
ஜூன் 17 23:02

இந்தியத் தூதுவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

(வவுனியா, ஈழம்) கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை இன்று வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்து உரையாடியுள்ளார். கொழும்பு 7 இல் உள்ள இந்தியத் தூதுவரின் அதிகாரபூர்வ இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தாத்தன், மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஜூன் 16 20:47

அத்தியாவசிய சேவைகளுக்காக வழங்கப்படும் விசேட அனுமதிப் பத்திரங்கள் துஸ்பிரயோகம்- மன்னார் அரச அதிபர்

(வவுனியா, ஈழம்) கொவிட்- 19 நோய் பரவல் காரணமாக பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்ட செயலகம் மூலம் வழங்கப்படும் விஷேட பாஸ் அனுமதியை பெற்றுக்கொள்ளும் சிலர் அதனை துஸ்பிரயோகம் செய்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து பொலிஸாரினால் தனக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மெல் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். இலங்கையில் வேகமாகப் பரவும் கொவிட்- 19 நோய் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தீவு முழுதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டு இறுக்கமான நடைமுறைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
ஜூன் 16 19:49

மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்கள்- மாவட்ட வைத்தியசாலைகள் கொழும்பு நிர்வாகத்தில்

(வவுனியா, ஈழம்) தமிழர் தாயகமான வட மாகாணத்தில் மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள நான்கு மாவட்டப் பொது வைத்தியசாலைகளை இலங்கை மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றது. கொழும்பு ஐனாதிபதி செயலகத்தில் கடந்த 14ம் திகதி திங்கள் மாலை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்படி வட மாகாணத்தில் உள்ள நான்கு மாவட்ட பொது வைத்தியசாலைகள் உட்பட ஒன்பது மாவட்ட பொது வைத்தியசாலைகளை இலங்கை மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் பொறுப்பில் எடுப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 15 22:15

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச - தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு திடீரென ஒத்திவைப்பு

(மட்டக்களப்பு, ஈழம் ) சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை புதன்கிழமை சந்திக்கவிருந்த நிலையில் அந்தச் சந்திப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சந்திப்பு நடைபெறாதெனவும் பிறிதொரு தினத்தில் குறித்த சந்திப்பு இடம்பெறும் என்றும் கொழும்பு காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இன்று செவ்வாய்க்கிழமை மாலை அறிவித்துள்ளது. இதனை கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்தரன் ஊடகங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
ஜூன் 14 22:32

முள்ளிவாய்க்கால் பிரதேச மக்களைப் பதிவு செய்யுமாறு பொலிஸார் உத்தரவு- படிவங்கள் வழங்கப்பட்டன

(முல்லைத்தீவு, ஈழம் ) தமிழர் தாயகமான வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் வீடுகளில் தங்கியிருப்பவர்களின் விபரங்களைப் பதிவு செய்யுமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். பதிவதற்கான படிவங்கள் இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டுள்ளன. இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் அனைத்துப் பிரதேசக் குடியிருப்பாளர்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறலாமென மக்கள் சந்தேகிக்கின்றனர். முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்களைப் பதிவு செய்யும் நோக்கம் தொடர்பாகப் பொலிஸார் எதுவுமே கூறவில்லை என்றும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
ஜூன் 13 19:05

வடமாகாணத்தில் போதைப்பொருட் கடத்தல்கள் தொடருவதாக இலங்கைப் பொலிஸார் கூறுகின்றனர்

(மன்னார், ஈழம் ) இலங்கை அரசாங்கத்தினால் கொவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவு முழுவதிலும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழர் தாயகப்பகுதியான வட மாகாணத்தின் சில பகுதிகளில் கசிப்பு உற்பத்தி மற்றும் சட்டவிரோதப் போதைவஸ்து கடத்தல் அதிகரித்துள்ளன. அத்துடன் இந்தியாவின் தமிழ்நாட்டு பகுதியில் இருந்து கடல் வழியாக படகுகள் மூலம் வட மாகாண மாவட்டங்களுக்கு போதை பொருட்கள் கடத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போதைப் பொருட் கடத்தல்களுக்கு இலங்கைப் பொலிஸார், படை அதிகாரிகள் சிலர் மறைமுக ஆதரவு வழங்கி ஊக்குவித்ததாக மக்கள் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தனர்.