(வவுனியா, ஈழம்)
கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை இன்று வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்து உரையாடியுள்ளார். கொழும்பு 7 இல் உள்ள இந்தியத் தூதுவரின் அதிகாரபூர்வ இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தாத்தன், மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.