(முல்லைத்தீவு, ஈழம் )
தமிழர் தாயகத்தின் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் யுத்த காலத்தில் பாவிக்கப்பட்ட அபாயகரமான வெடிபொருட்கள் தற்போது பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டு வரும் நிலையில் மேற்படி வெடி பொருட்களினால் பல வெடிப்புச் சம்பவங்களும் அண்மையில் அங்கு நிகழ்ந்துள்ளதினால், பொதுமக்கள் மத்தியில் கடும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. கைக் குண்டுகள் ஆட்டிலறிக் குண்டுகள் செல்கள் ரொக்கட் வெடி குண்டுகள் மற்றும் விமானக் குண்டுகளே பொது மக்களின் குடி நிலக்காணிகள் வயற் காணிகள் கைவிடப்பட்ட கிணறுகள் மற்றும் கடற் கரையோரங்களில் கண்டுபிடிக்கப்பட்டு அவை இலங்கைப் படைத்தரப்பினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.