நிரல்
நவ. 08 22:09

அரசாங்கத்தைக் கண்டிக்கும் கருத்து- அருட்தந்தை சிறில் காமினியைக் கைது செய்ய ஏற்பாடு

(வவுனியா, ஈழம்) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக அரசாங்கத்தைக் கண்டிக்கும் கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில், கொழும்புப் பேராயர் இல்லத்தில் அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படவுள்ளதைக் கண்டித்துக் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை கொட்டும் மழையிலும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் அருட் தந்தையர்கள், பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
நவ. 07 19:36

மன்னாரில் கடும் மழை- 13 கிராமசேவகர் பிரிவுகள் நீரில் மூழ்கின

(மன்னார், ஈழம்) வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் ஞாயிறு அதிகாலை பெய்த கடும் மழை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல்தீவு பகுதியின் மூன்று கிராமசேவையாளர் பிரிவுகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், இப்பகுதிகளில் உள்ள பல வீடுகளில் கடல் நீரும் உட்புகுந்துள்ளது. ஞாயிறு அதிகாலையில் பெய்த திடீர் மழை காரணமாக வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்ததினால் வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இன்று அதிகாலை பெய்த அடைமழை காரணமாக விடத்தல்தீவு மீனவர்கள் சிலரின் மீன்பிடிப்படகுகளும், மீன்பிடி வலைகளும் பாதிப்படைந்துள்ளது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
நவ. 05 18:42

சிறுவர்களைத் தாக்கும் கொவிட் 19

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் கொவிட் 19 நோய்த் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். சுகாதார விதிமுறைகளை பொது மக்கள் உரிய முறையில் பின்பற்றத் தவறுவதும் இதற்கு ஒரு காரணம் என்றும் மருத்துவர் தீபால் பெரேரா கூறினார்.
நவ. 04 18:52

மன்னாரில் ஐந்து நாட்கள் மழை

(மன்னார், ஈழம்) வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் பொது மக்களின் வீடுகளிலும் மழை நீர் உட்புகுந்துள்ளதினால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மூர் வீதி, உப்புக்குளம், பள்ளிமுனை, சௌத்பார், பணங்கட்டுக்கொட்டு, எமில்நகர் மற்றும் தலைமன்னார் கிராமம், தலைமன்னார் பியர் ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளதினால் பொது மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் இயல்பு வாழக்கையும், முற்றாக சீர்குழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நவ. 02 15:48

அமெரிக்க இந்திய நலன்களுக்கு ஏற்ப 13 ஐ கோரும் தமிழ்க் கட்சிகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) பலருடைய எதிர்ப்புகள், விமர்சனங்களுக்கு மத்தியில், அதுவும் பதினொரு வருடங்களின் பின்னர் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துமாறு கோரி தமிழ்த்தேசியக் கட்சிகள் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டன. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் 1987 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்திய இலங்கை அரசுகளிடம் கோரவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டம் முடிவடைந்ததும் கூர்மைச் செய்தித் தளத்துக்குத் தெரிவித்துள்ளார்.
நவ. 01 21:34

முரண்படும் அமைச்சர்கள் வெளியேறலாம்- காமினி லொக்குகே

(வவுனியா, ஈழம்) அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்து கொண்டு முரண்படுவோர் எந்த நேரத்திலும் வெளியேறிச் செல்லலாமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான மூத்த அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதயகம்பன்வில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் ஊடக மாநாடுகள் நடத்தி நாடகமாடிக் கொண்டிருப்பதாகவும் இவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறினாலும், மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை அரசாங்கம் பெற்றுக் கொள்ளுமெனவும் அமைச்சர் காமினி லொக்குகே கூறினார்.
ஒக். 31 10:16

மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி நீக்கப்பட்டதை மேல் முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

(மன்னார், ஈழம்) மன்னார் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய தவிசாளர் நியமனம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு வட மாகாணம் உள்ளூராட்சி ஆணையாளருக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக்கால தடை உத்தரவை மேலும் நீடிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கடந்த 27ஆம் திகதி புதன்கிழமை மேல் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மன்னார் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சாகுல் ஹமீட் முகம்மது முஜாஹீர், வட மாகாண ஆளுநரினால் பதவி நீக்கப்பட்டமை தொடர்பாக, அவரினால் இலங்கை மேல் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின் வழக்கு விசாரணைகள் 27ஆம் திகதி நடைபெற்ற நிலையிலேயே மேல் முறையீட்டு நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து இடைக்காலத் தடை உத்தரவையும் நீக்கம் செய்துள்ளது.
ஒக். 29 19:05

மகிந்த முன்னிலையில் பங்காளிக் கட்சிகள் சந்திப்பு

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சிக்குள் முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்திப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை மாலை திடீரென அழைப்பு விடுத்துள்ளார். நேற்று மாலை 5 30க்குச் சந்திப்பு நடைபெறுமென அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அமைவாகச் சுமார் நான்கு மணி நேரத்துக்கும் அதிகமாகக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஒக். 28 18:49

மன்னாரில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு

(மன்னார், ஈழம்) தமிழர் தாயகப் பகுதியான வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் கடந்த கால யுத்தத்தில், அசையா சொத்துகள் உடமைகள் மற்றும் உயிர் இழப்புகள் என கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளான பொதுமக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு கடந்த 25ஆம் திகதி திங்கள் மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டீ மேல் தலைமையில் நடைபெற்ற மேற்படி நஷ்டஈட்டுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் இலங்கையின் ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக்களின் தலைவருமான காதர் மஸ்தான் கலந்துகொண்டு இழப்பீட்டுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
ஒக். 27 21:48

ஒரே நாடு ஒரே சட்டம்- செயலணியின் தலைவராக ஞானசார தேரர் நியமனம்- நால்வர் முஸ்லீம்கள்

(மன்னார், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரிமையின் பிரகாரம் ஜனாதிபதிக்குரிய அதிகாரத்தின் கீழ் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதைச் செயற்படுத்த 13 பேர் அடங்கிய ஜனாதிபதிச் செயலணி ஒன்றை கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார். தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி வரும் ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொதுபல சேன அமைப்பின் செயலாளராகப் பதவி வகித்துக் கொண்டு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான பல வன்முறைகளில் ஏற்கனவே ஈடுபட்டவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்தவொரு நிலையில் தேரர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தச் செயலணியில் நான்கு முஸ்லிம் பிரநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழர்கள் எவரும் இல்லை.