டிச. 27 22:32
(வவுனியா, ஈழம்)
சீனாவை எதிர்த்து நிற்கும் சக்தி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்துக்கு இல்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமெரிக்க- இந்திய அரசுகளின் உதவியை எதிர்பார்க்கும் இந்த அரசாங்கத்துக்கு சீனாவை நேரடியாக எதிர்க்கத் தகுதியில்லை என்றும், சீனாவின் கடன் பிடிக்குள் சிக்குண்டுள்ளதாகவும் விஜயதாச ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருடன் முரண்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தரப்பில் தனித்துச் செயற்பட்டு வரும் விஜயதாச ராஜபக்ச. நிதியமைச்சர் பசில் ராஜபக்சவைக் கடுமையாக விமர்சித்தார்.