(வவுனியா, ஈழம்)
அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருட்கள், உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் வெவ்வேறுபட்ட விலைகளில் அதிகரித்துச் செல்வதால், ஆத்திரமடைந்த மக்கள் வீதியில் செல்லும் அமைச்சர்கள், அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை வழிமறித்துத் தர்க்கப்படுகின்றனர். கேகாலை, கன்டி, அம்பந்தோட்டை, போன்ற பல மாவட்டங்களிலும் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னால் வரிசையில் நாட்கணக்கில் காத்திருக்கும் மக்களே வீதியால் செல்லும் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தர்க்கப்பட்டு அவர்களை திருப்பி அனுப்புகின்றனர்.