ஏப். 10 22:23
(வவுனியா, ஈழம்)
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவி விலகவேண்டும் எனக்கோரியும், இலங்கைத்தீவின் தென்பகுதி முழுதும் இரவு பகலாக நடைபெறும் மாபெரும் எதிர்ப்பு ஆர்பாட்ட பேரணிகள் தமிழர் தாயகப்பகுதிகளிலும் பெரும் எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த சில தினங்களாக யாழ்பாணம், வவுனியா மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மேற்படி எதிர்ப்பு பேரணிகள் பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க முடியாது இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தமிழகத்திற்கு படகுகள் மூலம் தப்பிச் செல்லும் அவலமும் நடந்து வருகின்றது