(வவுனியா, ஈழம்)
கோட்டபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த ஐம்பது நாட்களாகப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு போன்றவற்றுக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதி காலிமுகத் திடலில் தொடர் போராட்டம் ஆரம்பமாகியது. கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரைப் பதவி விலகுமாறு வலியுறுத்திப் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், சென்ற ஒன்பதாம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அலரி மாளிகை முன்பாக தொடர் போராட்டம் நடைபெற்ற நிலையிலேயே மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.