செப். 28 22:11
(வவுனியா, ஈழம்)
ஜப்பான் முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் பங்குபற்றி, ஜப்பான் சென்ற ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார். புதன்கிழமை இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சம்பிரதாயபூர்வமாகச் சந்திப்பு இடம்பெற்றாலும். இலங்கைக்குக் கடன் வழங்குவதில் இந்தியாவின் மறுசீரமைப்புத் தொடர்பாக இருவரும் பேசப்பட்டதாகக் கொழும்பில் உள்ள இலங்கை வெளியுறவு அமைச்சு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணத்தை மேற்கொண்டு திங்கட்கிழமை ஜப்பான் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானின் முன்னாள் பிரதமர் மறைந்த ஷின்சோ அபேயின் இறுதி மரியாதை நிகழ்வில் கலந்துகொண்டார்.