நிரல்
செப். 26 06:23

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை விரும்பும் இந்தியா - கொழும்புப் பிரதிநிதிகளின் ஆலோசனையுடன் பூச்சிய வரைபு

(யாழ்ப்பாணம், ஈழம்) காலிமுகத் திடலில் நடைபெற்ற பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டங்களில் சிங்கள மக்களுடன் தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து பங்குபற்றியதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கைத்தீவில் மாற்றங்கள் ஏற்படுமென ஜெனீவா மனித உரிமைச் சபையின் பூச்சிய வரைபில் (zero draft) நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இக் கருத்தின் ஊடாக, ஈழத்தமிழர்களுடைய பிரதான அரசியல் நியாயப்பாடுகள் புறம் தள்ளப்பட்டுள்ளன. ஆணையாளர் மிச்சல் பச்லெட் பதவி விலகியுள்ள சூழலில், இந்த அறிக்கை ஜெனீவா மனித உரிமைச் சபையின் பணியாளர்கள் மட்டத்திலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தமிழ் - முஸ்லிம் மக்களின் நீண்டகாலப் பிரச்சினை என்று கூறப்படுகின்றதே தவிர தமிழர்களுடைய அரசியல் பிரச்சினையின் ஆழம் அறிக்கையில் தெளிவாக இல்லை.
செப். 25 06:15

இந்தியா நான்கு மாதங்களில் தொள்ளாயிரத்து அறுபத்து எட்டு மில்லியன் டொலர்களைக் கடனாக வழங்கியது

(வவுனியா, ஈழம்) இலங்கையில் மார்ச் மாதம் ஆரம்பித்த பொருளாதார நெருக்கடியின் பின்னரான நான்கு மாதங்களில் இந்தியா தொள்ளாயிரத்து அறுபத்து எட்டு மில்லியன் டொலர்களைக் கடனாக இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக இந்தியா மாறியுள்ளதாக டெய்லி பைனான்சியல் டைம்ஸ் கூறுகின்றது. இலங்கையின் மொத்தக் கடனில் அதிகளவு கடன்கள் சீனாவுக்கு உரியது. ஆனாலும் கடந்த நான்கு மாதங்களில் இந்தியா வழங்கிய கடன் தொகையின் அளவு மிகவும் கூடுதலானது என்றும், அதன் கடன் ஊடாகவே பொருளாதார நெருக்கடியை ஓரளவு சமாளிக்க முடிந்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
செப். 25 05:49

தாமரைக் கோபுரத்தின் கடனைச் செலுத்த, நாளாந்தம் 41 ஆயிரம் டொலர்கள் வருமானம் பெறப்பட வேண்டும்

கொழும்பு மருதானைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரம், இலங்கைக்கு அதிகளவு கடன் சுமைகளை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில், தாமரைக் கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற கடனை முழுமையாக செலுத்த வேண்டுமானால், அதன் மூலம் நாளாந்தம் நாற்பத்து ஓராயிரம் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சனிக்கிழமை கொழும்பில் தெரிவித்துள்ளார்.
செப். 23 14:31

பிரதமர் தினேஸ் குணவர்த்தனவுடன் இந்தியத் தூதுவா் உரையாடல்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கைக்குப் பொருத்தமான கடன் வசதிகள் மற்றும் பொருட்கள் நன்கொடை செய்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்தியாவுடன் இலங்கை கலந்துரையாடியுள்ளது. இந்தியாவும் இலங்கையும் இணைந்து முன்மொழியப்பட்ட கூட்டு வேலைத் திட்டங்கள் மற்றும் நோக்கங்களை விரைவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பிரதமர் தினேஸ் குணவர்த்தன, கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். பிரதமரின் அலரி மாளிகையில் வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் எல்டோஸ் மேத்யூஸ் ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். குறிப்பாக இலங்கைக்கு வழங்கிய கடன் மறுசீரமைப்புக் குறித்தே விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
செப். 22 07:47

நிதி வழங்குநர்களிடம் இருந்து உதவியைப் பெற இலங்கை தொடா்ந்து பேச்சு நடத்த வேண்டும்

(வவுனியா, ஈழம்) இலங்கைஅரசாங்கம் தமக்குரிய கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை, சர்வதேச கடன் வழங்குநர்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெறும் மேலதிகமான கலந்துரரையாடல்களின்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நிதி ஆலோசகர்களான க்லிபோர்ட் சான்ஸ் (Clifford Chance) மற்றும் லசார்ட் (Lazard) ஆகியோரின் உதவியுடன் இலங்கை கடன் மறுசீரமைப்பு வேலை திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் நந்தலால் வீரசிங்க கொழும்பில் வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
செப். 21 09:24

புலம்பெயர் இலங்கையர்களா, புலம்பெயர் தமிழர்களா?

(வவுனியா, ஈழம்) புலம்பெயர் தமிழர்கள் என்பது தற்போது புலம்பெயர் இலங்கையர் (Sri Lankan Diaspora) என்று இலங்கை ஒற்றையாட்சி அரசினால் மிக நுட்பமாக (Very subtle) மடைமாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. லண்டனில் ரணில் விக்கிரமசிங்க தமிழ்ப் புலம்பெயர் பிரதிநிதிகளைச் சந்தித்தாரா இல்லையா என்று தெரியாது. ஆனாலும் தமிழ் அமைப்புகளையும் சேர்த்தே சிங்கள - ஆங்கில ஊடகங்கள் புலம்பெயர் இலங்கையர்கள் என்று சித்தரிக்கின்றன. ஆகவே ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்களில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்குபற்றினார்களா இல்லையா என்பதைப் புலம்பெயர் அமைப்புகள் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவை லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சந்திப்பதற்கு வாய்ப்புகள் இருந்ததாகத் தெரியவில்லை.
செப். 20 08:23

பொறுப்புகளில் இருந்து சம்பந்தனை நீக்க குழு நியமனம்

(வவுனியா, ஈழம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் உடல் நலக்குறைவினால் சமீபகாலமாக அரசியலில் இருந்து ஓய்வெடுத்துள்ளார். இதனால் அவரைப் பக்குவமான முறையில் பதவிகளில் இருந்து நீக்குவதற்குக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் திங்கட்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஆகியவற்றியில் இருந்து நீக்குவதற்கே திர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
செப். 19 23:03

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- எதிர்க்கட்சிகள் கண்டனம்

(வவுனியா, ஈழம்) அமைச்சர்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்படுவது தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம் வெளியிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியினால் இலங்கை மீள எழும்ப முடியாத நிலையில் இருக்கும் போது அமைச்சர்களின் எண்ணிக்கை அவசியமற்றது என கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இரண்டு தசம் ஒன்பது பில்லியன்களை வழங்கப் பல நிபந்தனைகளை விதித்துள்ளது.
செப். 18 09:25

இலங்கைத்தீவு விவகாரம் குறித்த இந்திய அணுகுமுறையும், அமெரிக்க நிலைப்பாடும்

(வவுனியா, ஈழம்) சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்த இரண்டு தசம் ஒன்பது பில்லியன் நிதியை வழங்கவும், மேலதிகமான கடன்களைக் கொடுப்பதற்கும் உறுப்பு நாடுகள் இலங்கைக்கு வழங்கிய கடன்களை மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காகவே சர்வதேச நாணய நிதியம் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் கலந்துரையாடுகின்றது. ஆனாலும், தொடர்ந்து இலங்கைக்குக் கடன் வழங்குவதில் இழுபறிகள் உண்டு என்பதைச் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் அவ்வப்போது வெளியிடும் கருத்துக்கள் எடுத்துக் காட்டுகின்றன. அதாவது இந்து சமுத்திரத்தை மையமாகக் கொண்ட இந்தோ பசுபிக் பிராந்தியப் புவிசார் அரசியல் போட்டிகளே இதற்குப் பிரதான காரணம். இலங்கையின் கடன்களில் மூன்றில் இரண்டு பங்கு சீனா வழங்கிய கடன்களாகும்.
செப். 16 22:25

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை முன்னிலையாகுமாறு கொழும்புக் கோட்டை நீதிமன்றம் உத்தரவு

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்புக் கோட்டை நீதவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மைத்திரிபால சிறிசேன முன்னிலையாக வேண்டும்.