நிரல்
பெப். 19 07:06

கம்பன் விழா, தமிழ்த்தேசியத்தை கருவறுக்கும் முயற்சியில்!

(வவுனியா, ஈழம்) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கம்பன் விழா, ஈழத்தமிழர் பண்பாடு, தமிழ் மரபுரிமை மற்றும் ஈழத்தமிழ் சைவப் பண்பாட்டை உணர்த்தி நடத்தப்பட்டதா அல்லது வட இந்திய புனை கதைகளுக்கும் அதன் வழி வந்த பண்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ந்ததா என்பதை விழாவில் பங்குபற்றியோர் புரிந்திருப்பர். "அறிவுடை அமைச்சனாக வள்ளுவ நெறிப்படி நின்றவன் சுமந்திரனா அனுமனா" என்ற தலைப்பில் இடம்பெற்ற விவாதத்தில் ஈழத்தமிழர் தொடர்பாகப் பேராசிரியர் வரதராஜன் ஸ்ரீபிரசாந்தன் மற்றும் ஆசிரியரும், பேச்சாளருமான செல்வவடிவேல் ஆகியோர் இரண்டு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளனர்.
பெப். 15 22:44

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கம் இல்லை- அமைச்சர் பந்துல

(வவுனியா, ஈழம்) உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கம் இல்லையென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நிதி இல்லை என்பதால் வாக்காளர் அட்டை மற்றும் தேர்தல் செயற்பாடுகளுக்குரிய அச்சுப் பதிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பாகத் தனியார் இலத்திரனியல் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு புதன்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் அமைச்சர் பந்துல குணவர்த்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பெப். 14 16:16

தமிழ் அரசியல் கைதிகள் நால்வர் பிணையில் விடுதலை

(வவுனியா, ஈழம்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு பதின் நான்கு வருடங்களின் பின்னர் திங்கட்கிழமை பிணை வழங்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்து, 22 பேர் காயமடைந்தமை தொடர்பாக இந்த நான்கு கைதிகளுக்கும் எதிராக இலங்கைக் குற்றப் புலனாய்வுத்துறையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது சம்பவம் தொடர்பாகப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இருபத்து மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு காலி மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பெப். 12 15:19

பிக்குமாரின் இந்திய எதிர்ப்பும் இலங்கை ஒற்றையாட்சியும்

(வவுனியா, ஈழம்) 2002 இல் சமாதானப் பேச்சு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், "மாற்றுக் கருத்து" என்பதை அரசாங்கத்தின் பக்கமாக அல்லது இலங்கை அரசு என்ற கட்டமைப்புடன் ஒத்துப் போகக்கூடிய முறையில், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலமாக வடக்குக் கிழக்கில் புகுத்திய அமெரிக்க - இந்திய அரசுகள், 2009 இற்குப் பின்னரான சூழலில் நல்லிணக்கம், நடைமுறைச் சாத்தியமானதைச் சிந்தித்தல், மனித உரிமைப் பாதுகாப்பு போன்ற சொல்லாடல்களைப் புகுத்தி தமிழ்த்தேசியக் கோட்பாட்டைச் சிதைக்க முற்பட்டு வருகின்றனர் என்பது பட்டவர்த்தனம். தமிழ்த்தேசியக் கட்சிகளும் மக்களில் சிலரும் குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் பலரும் அந்தக் கருத்துக்களை அதிகமாகவே உள்வாங்கிவிட்டனர். இருந்தாலும் அந்த அரசியல் பின்னணியின் ஆபத்துக்களை அவர்கள் அறியாதவர்களும் அல்ல.
பெப். 09 23:09

பதின்மூன்றை நடைமுறைப்படுத்த வேண்டாமென ராஜபக்ச தரப்பு அமைச்சர்கள் ஜனாதிபதிடம் வேண்டுகோள்

(வவுனியா, ஈழம்) புதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் வெறுமனே மாகாண சபைத் தேர்தல்களை மாத்திரம் நடத்த வேண்டுமென ராஜபக்ச சார்பு அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. கொழும்பில் பௌத்த பிக்குமார் நடத்திய போராட்டம் மற்றும் பதின்மூன்றை நடைமுறைப்படுத்த வேண்டாமென மகாநாயக்கத் தேரர்கள் அனுப்பிய கடிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ரணில் விக்கிரமசிங்கவுடன் உரையாடிய ராஜபக்ச தரப்பு அமைப்புகள், பதின்மூன்று பற்றிய பேச்சைக் கைவிடுமாறும் கேட்டதாக அறிய முடிகின்றது.
பெப். 08 22:45

பதின்மூன்றுக்கு எதிராகக் கொழும்பில் பிக்குமார் போராட்டம்

(வவுனியா, ஈழம்) பதின்மூன்று முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தனது கொள்கை விளக்கவுரையின்போது கூறியபோது. கொழும்பில் பௌத்த குருமார் பதின்மூன்றுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மிகப் பெருந்திரளான பெளத்த பிக்குமார் கொழும்பில் நடத்திய பேரணியால் கொழும்பு நகரம் மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலாக ஸ்தம்பிதமடைந்தது. கலகமடக்கும் பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்தபோதும் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
பெப். 05 23:01

வடக்கில் இருந்து கிழக்குக்குப் பேரணி- இரண்டாம் நாளும் பெருமளவு மக்கள் பங்கேற்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கைத்தீவின் எழுபத்து ஐந்தாவது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடராக மேற்கொண்டு வரும் பேரணியில் பொதுமக்கள் பலரும் பங்குபற்றி வருகின்றனர். தமிழ்த்தேசியக் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளின்றி கலந்துகொண்டுள்ளனர். நான்காம் திகதி சனிக்கிழமை ஆரம்பித்த பேரணி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாள் முல்லைத்தீவில் நிறைவடைந்துள்ளது. இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவினர்களுக்காகப் பேரணியில் பங்குபற்றிய பொதுமக்கள் கண்ணீர் மல்க வணக்கம் செலுத்தியிருந்தனர். பெரும் திரளான மக்கள் முள்ளிவாய்காலில் ஒன்றுகூடியிருந்தனர்.
பெப். 02 23:14

பதின்மூன்றுக்கு மகாநாயக்கத் தேரர்கள் எதிர்ப்பு- இலங்கைத்தீவைப் பிளவுபடுத்தும் என்று கடிதம்

(வவுனியா, ஈழம்) புதின் மூன்றாவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், இலங்கைத்தீவின்; சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக பாரிய பிரச்சினைகளுக்கு வழி வகுக்குமென மகாநாயக்கத் தேரர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். ஏல்லே குணவன்ச தேரர் உள்ளிட்ட சில முக்கியமான மூத்த தேரர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை மகாநாயக்கத் தேரர்களும் கடிதம் எழுதியுள்ளனர்.
ஜன. 31 22:39

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம்- தேரர்கள் ரணிலுக்குக் கடிதம்

(வவுனியா, ஈழம்) பதின் மூன்றாவது திருத்தச் சட்டம் இந்தியாவினால் திணிக்கப்பட்டது. ஆகவே சர்வஜன வாக்கெடுப்பின்றி அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று கோரி எல்லே குணவன்ச தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரர் ஆகியோர் ஜனாதிபதி, ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். பதின் மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று தேரர்கள் கடிதத்தில் கோரியுள்ளனர்.
ஜன. 30 22:14

உயிர் அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிராக இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து தேர்தலைக் கண்காணிக்கும் பெப்ரல் அமைப்பு பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்னவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. உயிர் அச்சுறுத்தல் விடுத்தமைக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியதற்குப் பின்னால் உள்ள அரசியல் செல்வாக்குத் தொடர்பாக பெப்ரல் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.