செய்தி: நிரல்
மார்ச் 21 15:19

மன்னாரில் அரங்கேறும் அடாவடி - பொதுமகனது காணியில் கழிவுகளை எரியூட்டும் இலங்கை இராணுவம்

(மன்னார், ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து இலங்கை இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில் மன்னார் பிரதேச சபை பிரிவுக்கு உட்பட்ட திருக்கேதீஸ்வரம் - நாவற்குளம் பகுதியில், இராணுவத்திடமிருந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான காணியில் இலங்கை இராணுவம், கழிவுப்பொருட்களைக் கொட்டுவதுடன் அங்கு அவை தீயிட்டு எரிக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
மார்ச் 20 23:24

ஜனாதிபதி வேட்பாளரே என்று கோட்டாபய ராஜபக்சவைப் பார்த்துக் கூறினார் அமைச்சர் நவின் திஸாநாயக்கா

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரென செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் பாராட்டுக்கள் அதிகரித்துள்ளன. எதிர்க்கட்சியிலும் ஆளும் கட்சியிலும் உள்ள பலர் கோட்டாபய ராஜபக்சவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்கால ஜனாதிபதி வேட்பாளரே என்று கோட்டாபய ராஜபக்சவைப் பார்த்து ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் நவீன் திஸாநாயக்க கூறியுள்ளார். இன்று புதன்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு கொழும்பு நாராஹேன்பிட்டிய விகாரையில் நடைபெற்ற நிகழ்வில், கோட்டாபய ராஜபக்ச, அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகிய இருவரும் கலந்துகொண்டனர்.
மார்ச் 20 11:14

முல்லைத்தீவில் தொடரும் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் விசனம்

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழர் தாயகத்தில் 2009 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழர்களின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பொருளாதாரத்தை தீர்மானிப்பதில் மீன்பிடி மற்றும் விவசாயம் என்பன செல்வாக்குச் செலுத்துகின்றன. அதனடிப்படையில் போரின் காரணமாக அனைத்தையும் இழந்து அடிப்படையிலிருந்து தமது வாழ்வாதாரத்தை ஆரம்பித்துள்ள முல்லைத்தீவு மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் தொடர்ந்தும் வெளிமாவட்ட மீனவர்களின் மீன்பிடித் தொழிலால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.
மார்ச் 19 10:11

இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரி கிழக்கு மாகாணத்தில் பேரணி - ஹர்த்தால்

(மட்டக்களப்பு, ஈழம்) ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் எழுச்சிப் பேரணி ஒன்று நடைபெற்றது. தமிழ் இன அழிப்புத் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இடம்பெற்ற பேரணியில் பல்லாயிரம் மக்கள் கலந்துகொண்டனர். வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டது. போராட்டத்தினால் கிழக்கு மாகாணம் ஸ்தம்பிதமடைந்தது. அரசியல் கட்சிகள், வடக்கு – கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள், கிழக்குப் பல்கலைக்கழகச் சமூகம், கல்விச் சமூகம் ஆதரவை வழங்கியுள்ளது. போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் கல்வியாளர்களும் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 18 22:55

கோட்டாபய போட்டியிட்டால் மகிந்த அணி தோற்பது உறுதி ரணில் - ராஜபக்ச குடும்பமும் ஒதுங்கும் என்கிறார்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜபக்சவினால் அறிவிக்கப்படுவார் என செய்திகள் வெளியானதும் கொழும்பில் சிங்கள அரசியல் கட்சிகளிடையே பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேவேளை, அவசர அவசரமாக கென்யாவில் இருந்து கொழும்புக்குத் திரும்பிய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இதுவரை முடிவுகள் எதுவுமே எடுக்கப்படவில்லையென அறிவித்துள்ளார். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களை உனடியாக அழைத்து உரையாடியுமுள்ளார்.
மார்ச் 18 10:21

பிரேரணை இலங்கையின் திருத்தங்களுடன் நிறைவேறும் - உயர்மட்டக்குழு ஜெனீவா பயணம், சம்பந்தன் ஆதரவு

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஜெனீவா மனித உரிமைச் சபையின் 40 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக இலங்கை அரசின் உயர்மட்டக்குழு இன்று திங்கட்கிழமை பயணமாகியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் பிள்ளை ஆகியோர் ஜெனீவாவுக்குப் பயணம் செய்துள்ளனர். மனித உரிமைச் சபையில் பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளின் அனுசரணையுடன் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை எதிர்வரும் 20 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுக்கப்படவுள்ளது. இதன்போது இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இந்த உயர்மட்டக்குழு திருத்தங்கள் உள்ளடங்கிய கருத்துக்களை முன்வைக்கவுள்ளது.
மார்ச் 17 22:52

திருகோணமலை மூதூர் பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிக்க இலங்கை அரசாங்கம் ஏற்பாடு- சம்பந்தன் எதிர்ப்பு

(திருகோணமலை, ஈழம்) தமிழ பேசும் மக்களின் தாயகப் பிரதேசமான கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேசச் செயலகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முற்பட்டு வருகின்றது. மூதூர் பிரதேசச் செயலகத்தை பிரித்து, மூதூர், தோப்பூர் என்ற இரு பிரதேசச் செயலகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அரசியல் அழுத்தங்களின் பின்னணியிலும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் விகிதாசரத்தைக் குறைத்துக் காண்பிக்கும் நோக்கிலும் இலங்கை அரசாங்கம் இவ்வாறு செயற்படுவதாக தமிழ்த்தரப்புகள் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தன. இந்த நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
மார்ச் 16 15:33

தமிழ் இனப்படுகொலை தொடர்பான விசாரணைக்கு சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் - பேரணியில் கோஷம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் இனஅழிப்பை வெளிப்படுத்தியும் போர்க்குற்றம் மற்றும் இன அழிப்பு விசாரணைக்கு சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் அவசியம் என்பதை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை மாபெரும் பேரணி ஒன்று நடைபெற்றது. 'நீதிக்காய் எழுவோம்' என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாணம் முற்றவெளி வரை சென்றது. அங்கு ஒன்றுகூடிய மக்கள் இலங்கை அரசாங்கம், இலங்கை இராணுவம் ஆகியவற்றுக்கு எதிரான கோசங்களை எழுப்பினர். சுலோக அட்டைகளையும் பதாதைகளையும் கைகளில் எந்தியிருந்தனர்.
மார்ச் 15 18:57

அவுஸ்திரேலிய, இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் - கொழும்பில் தூதுவர் அறிவிப்பு, நான்கு கப்பல்கள் வருகை

(யாழ்ப்பாணம், ஈழம் ) அவுஸ்திரேலியாவும் இலங்கையும் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்யவுள்ளதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையேயான பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் அவுஸ்திரேலிய அரசாங்கம் நீண்டகாலமாக பேச்சு நடத்தியது என்றும் அதனடிப்படையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் எனவும் கொழும்பில் உள்ள அவுஸ்திரேலியப் பிரதித் தூதுவர் ஜோன் பிலிப் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகின்றமை தொடர்பாக கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவுஸ்திரேலியப் பிரதி தூதுவர் ஜோன் பிலிப் விளக்கமளித்தார். ஆனால் இதுவரையும் இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக எதுவும் கூறவில்லை.
மார்ச் 15 11:15

இலங்கை அரச கட்டமைப்பைக் காப்பாற்ற முற்படும் சந்திரிகாவும் ரணில் அரசாங்கமும் - ஜெனீவா ஒத்துழைப்பு

(வவுனியா, ஈழம்) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபை கூறுகின்ற அனைத்து விடயங்களையும் இலங்கை அரசாங்கம் அப்படியே ஏற்றுக்கொள்ளாதென இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இலங்கையின் இறைமை தன்னாதிக்கம் ஆகியவற்றைப் பாதுகாப்பது தொடர்பாக இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகளுடனும் அரசாங்கம் இணைந்து செயற்படும் என்றும் திலக மாரப்பன தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தின் பிடியில் உள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் இன்னமும் பொதுமக்களிடம் கையளிக்கப்படவில்லையென மனித உரிமைகள் ஆணையாளர் கூறியுள்ளதை இலங்கை அரசாங்கம் எற்றுக்கொள்ளவில்லை என்றும் திலக் மாரப்பன கூறியுள்ளார். இலங்கையின் உள்ளகப் பிரச்சினையை இலங்கை மக்களுடன் இலங்கை அரசாங்கம் பேசித் தீர்க்கும்.