(மட்டக்களப்பு, ஈழம்)
ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் எழுச்சிப் பேரணி ஒன்று நடைபெற்றது. தமிழ் இன அழிப்புத் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இடம்பெற்ற பேரணியில் பல்லாயிரம் மக்கள் கலந்துகொண்டனர். வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டது. போராட்டத்தினால் கிழக்கு மாகாணம் ஸ்தம்பிதமடைந்தது. அரசியல் கட்சிகள், வடக்கு கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள், கிழக்குப் பல்கலைக்கழகச் சமூகம், கல்விச் சமூகம் ஆதரவை வழங்கியுள்ளது. போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் கல்வியாளர்களும் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.