ஏப். 21 14:33
(யாழ்ப்பாணம், ஈழம் )
இலங்கையின் தலைநகர் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், சினமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரிலா ஹோட்டல், புறகர் பகுதியான நீர்கொழும்பு கட்டுவபிட்டி புனித செபஸ்ரியன் தேவாலயம், மற்றும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகிய ஆறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 290 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஐநூறுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். கொழும்புத் தேசிய வைத்திய சாலையில் 260 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.15இற்கும் 9.15இற்கும் மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் குண்டுகள் வெடித்துள்ளதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர்.