நிரல்
ஏப். 22 19:44

உயிர்த்தஞாயிறு தொடர் பயங்கரத் தாக்குதல்கள் இலங்கைத்தீவைக் களமாக்கியது ஏன்?

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஈழத்தமிழர் தாயகத்தில் ஆயுதப்போராட்டம் நடந்த காலத்தில் தாம் விரும்பிய நேரத்தில் போர்க்கப்பல்களை இத் தீவுக்கு அனுப்பக்கூடிய நிலை அமெரிக்காவுக்கு இருந்திருக்கவில்லை. ஆனால் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னைய சூழலில், திருகோணமலையில் மட்டுமல்ல அம்பாந்தோட்டையிலும் இலங்கைக் கடற்படையுடன் தாம் நினைத்த நேரத்தில் கூட்டுப்பயிற்சி செய்வோம் என்பதைச் சீனாவுக்கு அமெரிக்கா வெளிப்படுத்திய மூன்று நாட்களுக்குள் இலங்கையின் ஸ்திர நிலை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. சீன நட்பு நாடான பாகிஸ்தான் ஊடாக முன்னேற்பாட்டுடன் உருவாக்கப்பட்ட இஸ்லாமியாவாத குழு ஒன்று தொடர் பயங்கரத் தாக்குதல் ஒன்றைக் கடலால் சூழப்பட்ட தீவொன்றுக்குள்ளும் தன்னால் செய்ய முடியும் என்று நிறுவியிருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
ஏப். 21 18:50

கொழும்பு நட்சத்திர ஹோட்டல் குண்டு வெடிப்பில் 33 வெளிநாட்டவர் பலி

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் தலைநகர் கொழும்பு அதன் புறநகர் பகுதியான நீர்கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு சியோன் தேவாயலத்திலும் தொடர்ச்சியாக இடம்பெற்ற குண்டு வெடிப்பையடுத்து இலங்கையின் முப்படையினரும் முக்கியமான சந்திகளில் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை ஆறு மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாளையும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமையும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் அனைத்துக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஏப். 21 14:33

கொழும்பில் தொடர் குண்டு வெடிப்பு- 290 பேர் பலி, கொல்லப்பட்டோரில் அதிகமானோர் தமிழர்கள்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் தலைநகர் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், சினமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரிலா ஹோட்டல், புறகர் பகுதியான நீர்கொழும்பு கட்டுவபிட்டி புனித செபஸ்ரியன் தேவாலயம், மற்றும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகிய ஆறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 290 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஐநூறுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். கொழும்புத் தேசிய வைத்திய சாலையில் 260 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.15இற்கும் 9.15இற்கும் மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் குண்டுகள் வெடித்துள்ளதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏப். 20 22:56

தண்டனைக் குற்றவியல் சட்டத்தின் படி தாக்கிக் காயப்படுத்தல் பிரிவின் கீழ் ஊடகவியலாளர் மீது வழக்கு

(முல்லைத்தீவு, ஈழம்) வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றும் சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் இன்று சனிக்கிழமை இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு நீதிபதியின் இல்லத்தில் இன்று மாலை தவசீலன் முன்னிலையானார். ஏதிர்வரும் 30 ஆம் திகதி அடுத்த கட்ட விசாரணை நடைபெறவுள்ளது. இலங்கைக் குற்றவியல் தண்டனைச் சட்டம் (Penal Code) பிரிவு 314 இன் கீழ் முல்லைத்தீவுப் பொலிஸார் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். கடமை நேரத்தின்போது தன்னைத் தாக்கியதாக முல்லைத்தீவில் உள்ள இலங்கை அரசின் கோட்டாபய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர், ஊடகவியலாளர் தவசீலனுக்கு எதிராக முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தார்.
ஏப். 20 22:04

சவுதி அரேபியாவில் சிறையிலடைக்கப்பட்ட ரோகிங்யா கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) சுமார் அறுநூற்றுக்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லீம் ஆண்கள் சவுதி அரேபியாவின் ஜேட்டா பகுதியில் உள்ள சிறையில் 2012 ஆம் ஆண்டிலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தங்கள் விடுதலையை வேண்டி தற்போது சில நாட்களாக உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்துள்ளார்கள். ஆரம்பித்த சில நாட்களில் இவர்களில் பலர் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார்கள். இவர்கள் மூன்றாவது தடவையாக தங்கள் விடுதலையை வேண்டி தற்போது உண்ணாவிரத போராட்டம் செய்கிறார்கள். சவுதி அரேபியாவில் மூன்று லட்சம் ரோகிங்யாக்கள் பல தசாப்தங்களாக அகதிகளாக வாழ்கிறார்கள். அவர்கள் எவருமே மியன்மாரின் கடவுச்சீட்டுடன் சவுதி அரேபியாவுக்கு வரவல்லை. ஏனெனில் 1982இல் மியன்மார் இவர்களின் குடடியுரிமையை பறித்துவிட்டது.
ஏப். 20 15:48

விசாரணையின் பின்னர் தமிழ் ஊடகவியலாளர் பொலிஸாரால் கைது

(முல்லைத்தீவு, ஈழம்) வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றும் சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் இன்று சனிக்கிழமை இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவில் உள்ள இலங்கை அரசின் கோட்டாபய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு மேற்கொண்ட பொய்யான முறைப்பாட்டில் தவசீல்ன் கைது செய்யப்பட்டுள்ளதாக சக ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வடக்கு கிழக்கில் இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கடந்த 07.04.2019 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்திருந்தனர். அப்போது செல்வபுரம் பேருந்து நிலையத்தில் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும் ஊடகவியலாளர்களையும் இனம் தெரியாத நபர் ஒருவர் படம் எடுத்தார்
ஏப். 19 21:18

யாழ்ப்பாணம், முல்லைத்தீவில் இடிமின்னல்- விசுவமடு, புத்தடியில் மாணவன் உயிரிழப்பு மற்றொருவர் காயம்

(முல்லைத்தீவு, ஈழம்) வடமாகாணத்தில் கடுமையான வெப்பத்தின் பின்னர் தொடர்ச்சியாக இடி மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்கின்றது. கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுன்னாகம் குப்பிளான் தெற்கு மயிலங்காடு பிரதேசத்தில் இடிமின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த நிலையில் இன்று முல்லைத்தீவு விசுவமடு, புத்தடிப் பிரதேசத்தில் பிற்பகல் மூன்று மணியளவில் இடி மின்னல் தாக்கி 18 வயதான மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொரு மாணவன் காயமடைந்து தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேவேளை, யாழ் நகரில் மணற்தரை ஒழுங்கைக்கு அருகில் உள்ள சிவன் அம்மன் கோவிலடியில் இடி வீழ்ந்ததில் இரண்டு தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்துள்ளன.
ஏப். 18 23:30

கூட்டுப் பயிற்சிக்காக அமெரிக்காவின் இரண்டு போர்க் கப்பல்கள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வருகை

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் தற்போது பிரதான சிங்களக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இலங்கைக் கடற்படையுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுபடுவடுவதற்காக அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் இன்று வியாழக்கிழமை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.என்.எஸ் மில்லிநோகேட் (USNS Millinocket), யு.எஸ்.எஸ் ஸ்ப்ருவன்ஸ் (USS Spruance), ஆகிய இரண்டு போர்க்கப்பல்களே இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளன.
ஏப். 18 16:10

மாகாண சபைகளுக்கு ஆபத்து-13 ஆவது திருத்தச் சட்டம் கைவிடப்படலாம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம், நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதா என்பது ஆலோசித்து வருகின்றது. பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் அதனை விரும்புகின்றன. ஆனால் 2016 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் அஙீகரிக்கப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி எந்தத் தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பது குறித்து இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும். முதலில் மாகாண சபைத் தேர்தல்களே நடத்தப்பட வேண்டும். ஆனால் அதற்கான காலம் பிந்தியுள்ளதாகவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் சட்டச் சிக்கல் இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இலங்கைச் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு ஏலவே கடிதம் அனுப்பியுள்ளார்.
ஏப். 17 23:21

இலங்கையின் பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 42 பேர் பலி

(யாழ்ப்பாணம், ஈழம் ) வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கொழும்பில் இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடந்த சில தினங்களாக இடம்பெற்று வரும் வீதி விபத்துக்கள் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே ருவன் குணசேகர இவ்வாறு தெரிவித்தார். கடந்த 13ஆம் திகதி காலை ஆறு மணியிலிருந்து இன்று புதன்கிழமை காலை ஆறு மணிவரை வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கை ழுமுவதிலும் முப்பத்தியொரு வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.