(யாழ்ப்பாணம், ஈழம்)
சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்துள்ளதாலும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான நிலையிலும், கொழும்புத் துறைமுகத்தின் தென்பகுதியில் உள்ள கிழக்குக் கொள்கலன் முனையத்தில் பாரிய கொள்கலன் கப்பல்கள் வந்து செல்லக் கூடியதாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணங்கியுள்ளன. இதற்கான பேச்சுக்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் இடம்பெறுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. விரைவில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அபிவிருத்திச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கொழும்புத் துறைமுகத்தின் தென்பகுதியில் உள்ள கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு கடந்த ஆண்டு இந்தியா கோரியிருந்தது.