கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
நவ. 08 22:28

தமிழரசுக் கட்சியை பகிரங்கமாகக் கண்டிக்கத் தயங்கிய மாணவர்கள், சிவில் சமூக அமைப்புகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உள்ளிட்ட ஐந்து தமிழ்க் கட்சிகளோடும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் கலந்துரையாடியது. இறுதியில் பதின்மூன்று அம்சக் கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் முன்னணி தவிர்ந்த ஐந்து தமிழ்க் கட்சிகள் மாத்திரமே கைச்சாத்திட்டிருந்தன. இந்த ஆவணத்தை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளருக்கே ஆதரவு வழங்குவதென்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆவணம் சிங்கள ஆங்கில ஊடகங்களில் ஈழக் கோரிக்கையாகச் சித்தரிக்கப்பட்டிருந்ததையடுத்துத் தமிழ்க் கட்சிகளைச் சந்திக்காமலேயே பிரதான வேட்பாளர்கள் இந்த ஆவணத்தை ஏற்க முடியாதெனக் கூறிவிட்டனர்.
ஒக். 14 23:25

ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான ஆவணத்தில் ஐந்து தமிழ்க் கட்சிகள் கைச்சாத்திட்டன

இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களிடம் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்கும் நோக்கில் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டு ஆவணம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் தொடர் முயற்சியினால் இடம்பெற்ற கலந்துரையாடல்களின்போது எட்டப்பட்ட பொது இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே கூட்டு ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டு இன்று திங்கட்கிழமை மாலை கையொப்பமிடப்பட்டுள்ளது. இன்று ஐந்தாவது தடவையாக நடத்தப்பட்ட பேச்சுக்களின் முடிவில், இன்று மாலை 6.30க்கு பொது இணக்கப்பாட்டு ஆவணத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒக். 02 10:38

சிங்கள ஆட்சியாளர்களைத் தமிழர்கள் நிராகரிக்கப்போகும் இறுதி நிலை

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பான நிலைப்பாடுகள், கருத்துக்களில் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் மத்தியிலும் ஏனைய சிங்கள அரசியல் பிரதிநிதிகளிடமும் குழப்பங்கள், முரண்பாடுகள் நீடித்துச் செல்கின்றன. இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டால் மாத்திரமே சிங்கள அரசியல் கட்சிகள் நிம்மதியாக அரசியலில் ஈடுபடலாமென்ற நிலை மாறித் தற்போது தமது கட்சிப் பிரச்சினைகளை மாத்திரமே சிங்கள ஆட்சியாளர்கள் முக்கியப்படுத்தி வருகின்றனர் என்பதையே சமீபகாலச் செயற்பாடுகள் கோடிட்டுகாட்டுகின்றன. சஜித் பிரேமதாச வேட்பாளராகப் போட்டியிடுவதால் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலரிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
செப். 13 15:31

ரணில்- சஜித் இணக்கமில்லை- கட்சியின் மத்தியகுழு தீர்மானிக்கும்!

(வவுனியா, ஈழம்) ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதமாச ஆகியோரிடையே சரியான இணக்கம் ஏற்படவில்லையெனக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக கட்சியின் மத்திய குழுவே இறுதி முடிவெடுக்குமென சஜித் பிரேமதாசவிடம் கூறியதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ்க் கட்சிகளை சஜித் பிரேமதாச சந்திக்கவுள்ளார்.
ஓகஸ்ட் 25 16:07

டில்லிக்கு என்ன சொல்ல வேண்டும்? தீர்மானிக்க வேண்டிய தமிழ்த் தரப்பு

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்தியாவுக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளனர். கடந்த மே மாதம் இரண்டாவது தடவையாகவும் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திரமோடி சில நாட்களிலேயே இலங்கைக்குப் பயணம் செய்திருந்தார். அப்போது கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்திருந்த மோடி புதுடில்லிக்கு வருமாறு அழைப்பும் விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று இந்தியாவுக்குச் செல்லவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கூறுகின்றார். ஆனாலும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இலங்கையுடன் இந்தியாவுக்குத் தற்போது ஏற்பட்டுள்ள பனிப்போர் தொடர்பாகவே கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
ஓகஸ்ட் 19 22:49

வேட்பாளராக கோட்டாபய அறிவிக்கப்பட்ட நிலையில் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியானார்

(வவுனியா, ஈழம்) ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இன அழிப்பு நடவடிக்கைகள், மனித உரிமை மீறல், போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மேஜர் ஜெனரல் (Major General) சவேந்திர சில்வா இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழழை இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இந்த நியமனத்தின்போது ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட ஆகியோரும் கலந்துகொண்டனர். இலங்கைப் படையின் பிரதானியாகப் (Army Chief of Staff) பதவி வகித்திருந்த சவேந்திர சில்வா 2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் உக்கிரமடைந்திருந்தபோது இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகப் பதவி வகித்திருந்தார்.
ஓகஸ்ட் 14 15:29

காஷ்மீர் பிரிப்பு- மகிந்தவுடன் பாகிஸ்தான் தூதுவர் பேசியதன் பின்னணி

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்தியாவின் ஜம்முகாஷ்மீர் மாநிலம் இரண்டு நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டமை சர்வதேசச் சட்டம் ஒன்றை மீறிய செயல் என்று கொழும்பில் உள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் ஷாஹிட் அஹமட் ஹஸ்மத் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளார். ஜம்முகாஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டமை தொடர்பாக நேற்றுச் செவ்வாய்க்கிழமை சந்தித்து தூதுவர் விளக்கமளித்துள்ளார். ஜம்முகாஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டமை தொடர்பாக தனது அரசியல் கருத்தை வெளியிட்ட முதலாவது தலைவர் மகிந்த ராஜபக்ச என்றும் பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் ஷாஹிட் அஹமட் ஹஸ்மத் பாராட்டியதாகக் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் 13 15:46

சஜித் பிரேமதாசவைப் பொது வேட்பாளராக அறிவிக்க மைத்திரி திட்டம்!

(வவுனியா, ஈழம்) இலங்கையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டுமென கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மாத்தறை, அம்பாந்தோட்டை, பதுளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் கட்சி உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றனர். சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதியாக்குவதே தமது நோக்கமென அமைச்சர் ஹரின் பொர்ணான்டோ கூறியுள்ளார். பதுளைப் பிரதேசத்தில் நேற்றுத் திங்கட்கிழமை சஜித் பிரேமதாசவுக்கு மாபெரும் வரவேற்பு நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றது.
ஓகஸ்ட் 11 22:17

வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச - அறிவிப்புக்கு முன்னர் மகிந்தவைச் சந்தித்த அமெரிக்கச் செயலாளர்

(வவுனியா, ஈழம்) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவாரென கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டார். கட்சியின் பொதுச் சபைக் கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெறுவதற்கு முன்னர் அமெரிக்காவின் மத்திய மற்றும் தென்னாசியாவிற்கான பதில் உதவி செயலாளர் அலைஸ் வெல்ஸ், கொழும்பிலுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிஸ்ட் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து இரண்டு மணிநேரம் உரையாடினர்.
ஓகஸ்ட் 09 14:28

இந்தியாவின் உள் விவகாரமா? மோடியைப் பாராட்டும் ரணில்

(வவுனியா, ஈழம்) ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு நிர்வாக அலகுகளாகப் (Union) பிரிக்கப்பட்டு இந்திய மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதை இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களும் கண்டியை மையப்படுத்திய பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களும் வரவேற்றுள்ளனர். ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டே ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டிருந்தது. 1947 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் நேருவினால் பரிந்துரைக்கப்பட்டு இந்திய நாடாளுமன்றத்தில் சட்டமாக அங்கீகரிக்கப்பட்டு 1954 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது. இந்த நிலையில் நரேந்திரமோடி அரசு தன்னிச்சையாகப் பிரிந்துள்ளமை ஈழத் தமிழர்களின் சுயமரியாதைக்கு விழுந்த மற்றுமொரு அடியாகவும் சிங்களத் தேசம் கருதுகின்றது.