(சென்னை, தமிழ்நாடு)
இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் பெரும்பான்மை பெற்ற பா.ஜ.கவின் புதிய அரசாங்கம் பதவி ஏற்றுள்ளது! தமிழ் தெரிந்த இருவர் அமைச்சராகப் பதவியேற்றுள்ளனர். எந்தத் துறை என்பதும் கூடியவிரைவில் வெளியாகும். அதில் ஒருவரான நிர்மலா சீதாராமன் 2017 - 2019இல் இராணுவ அமைச்சராக பதவிவகித்தவர். இன்னொருவரான ஜெய்சங்கர் 1988-1990 இல் இந்திய அமைதிப்படைக்கான அரசியல் ஆலோசகராக இருந்தவர் என்பதும், ஜெய்சங்கர் மற்றும் அவரது தந்தை சுப்ரமணியன் அவர்கள் இருவருமே இந்திய - அமெரிக்க ஒப்பந்தங்கள் பலவற்றில், குறிப்பாக அணுசக்தி விவகாரங்களில், ஆலோசகராகவும் இருந்தவர்கள். இந்திய வெளிவிவகார அதிகாரிகளில் மாந்தரின், ஜப்பான், ருசிய மொழிகளில் புலமை வாய்ந்த வெகுசிலரில் ஜெய்சங்கரும் ஒருவர் என்பதும் கவனிக்கத்தக்கது.