(வவுனியா, ஈழம்)
இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த முற்பட்டு வரும் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கையின் உட்கட்டமைப்புளைக் கட்டமைக்க கூட்டாக செயட்படுவது குறித்துக் கலந்துரையாடியுள்ளன. மியன்மார், பங்களாதேஸ், போன்ற நாடுகளிலும் பிராந்திய நலன் சார்ந்து அந்த நாடுகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் பேச்சு நடத்தியுள்ளன. ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒசாகா நகரில் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் அபிவிருத்தித் திட்டத்தில் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து செயற்படுவதற்கான உடன்படிக்கையில் ஏலவே கைச்சாத்திட்டுள்ளன.