(யாழ்ப்பாணம், ஈழம்)
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது, இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மண்டபத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பார்த்து மதுபோதையில் நின்று கூச்சலிட வேண்டாமெனக் கூறியுள்ளனர். இதனால் அங்கு பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் அங்கஜன் ராமநாதன், அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரிடம் சென்று காணாமல் ஆக்கப்பட்ட உங்கள் பிள்ளைகள் பற்றிக் கேளுங்கள் என தமிழரசுக் கட்சித் தொண்டர்கள் உரக்கச் சத்தமிட்டனர்.