(முல்லைத்தீவு, ஈழம்)
வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை முற்று முழுதாக பௌத்த மயமாக்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் திட்டத்திற்கு மத்தியிலும், குறித்த ஆலயத்தில் ஈழத்தமிழர்களின் நிலவுரிமையை நிலைநாட்டும் நோக்கில் மாபெரும் பொங்கல் விழா நடைபெற்றுள்ளது. நூற்றியெட்டுப் பானைகளில் பொங்கல் பொங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. திருகோணமலை தென்கையிலை ஆதின சுவாமி தவத்திரு அகத்தியர் அடிகளார், யாழ் சிதகாசனந்தக் குருக்கள், உள்ளிட்ட சைவ சமயப் பெரியார்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக நிகழ்வில் பங்குபற்றிய ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.