(கிளிநொச்சி, ஈழம்)
வடக்கு- கிழக்குப் பகுதிகளில் நிலவும் தொடர் வரட்சியினால் கிளிநொச்சி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாற்பத்து நான்கு கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த ஏழாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து ஏழு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. வரட்சியினால் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் நாற்பத்து நான்கு கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த இருபத்து ஏழாயிரத்து ஐந்நூற்று அறுபத்து நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.