(வவுனியா, ஈழம்)
இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் போட்டிகள் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையுடன் ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இலங்கைப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன, (Ruwan Wijewardene) ஜப்பான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கேஹன்ஜி ஹரதா (Kenji Harada) ஆகிய இருவரும் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனளர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளிடையேயும் தற்போது காணப்படும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் தன்மைகள் மேலும் அதிகரிக்கப்படுமென ருவான் விஜயவர்தன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.