செப். 12 16:37
வடமாகாணத்தில் உள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இலங்கை இராணுவத்தினர் சுவீகரித்துள்ள காணிகளை மீண்டும் பொது மக்களிடம் கையளிப்பதற்கான கலந்துரையாடல்கள் இன்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய, வன்னி படைகளின் கட்டளை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அத்துடன் உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்காந்தராசா ஆகியோரும் பங்குகொண்டனர்.