செப். 03 15:04
(கிளிநொச்சி, ஈழம் )
வடமாகாணம் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் நிலவும் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கோணாவில், அக்கராயன், காஞ்சிபுரம், தட்டுவன்கொட்டி, பூநகரி, கண்டாவளை, ஆகிய பகுதிகளிலேயே கூடுதலாக வரட்சி ஏற்பட்டுள்ளதாகவும் குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது. வரட்சியால் ஒன்பதாயிரத்தி 933 குடும்பங்களைச் சேர்ந்த 34,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கால் நடைகளும் குடிநீரின்றி தவிப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.