ஒக். 17 09:41
(வவுனியா, ஈழம்)
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஆதரவுகளைத் தெரிவித்து செய்திகள், செய்திக் கட்டுரைகளை வெளியிட்டு வரும் சிங்கள நாளிதழ்கள் தமிழ்க் கட்சிகள் ஆதரவு வழங்குவதற்காக முன்வைக்கும் கோரிக்கைகளை கடும் இனவாதமாகச் சித்தரித்து வருகின்றன. வடக்குக் கிழக்குப் பகுதிகளில் உள்ள சிங்களக் கிராமங்கள், விகாரைகளை இல்லாமல் செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள நாளிதழில் பிரசுரமான செய்திகளை கட்சியின் மூத்த உறுப்பினர் அமைச்சர் மங்கள சமரவீர மறுத்துள்ளார். இலங்கையின் இறைமை பிரிக்கப்படாதென்றும் கூறினார்.