டிச. 06 20:52
(கிளிநொச்சி, ஈழம்)
வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ச்சியாக மழை பெய்தமையினால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி. மற்றும் மட்டக்களப்புப் பிரதேசங்களில் உள்ள தாழ்ந்த பகுதிகளில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ளனர். குறிப்பாகக் கிளிநொச்சி மாவட்டம் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியில் ஆறாயிரத்து 841 குடும்பங்களை சேர்ந்த இருபத்து இரண்டாயிரத்து 262 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு்ள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.