நிரல்
டிச. 10 16:06

நீதி கேட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

(கிளிநொச்சி, ஈழம்) சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டங்கள் கவனயீர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றன. இலங்கைப் படையினரால் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டங்களை முன்னெடுத்தனர். கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தினர். கிளிநொச்சி. மட்டக்களப்பு, மன்னார் ஆகிய பிரதேசங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
டிச. 09 22:39

ஆய்வாளர் ஜோதிலிங்கத்தின் வீட்டில் கொள்ளை- ஸ்மாட் போன் இலக்கு வைக்கப்பட்டதன் நோக்கம்?

(யாழ்ப்பாணம், ஈழம்) சிவில் சமூகச் செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளருமான சட்டத்தரணி சி.அ.ஜோதிலிங்கத்தின் யாழ்ப்பாணம் உரும்பிராய் பிரதேசத்தில் வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் ஜோதிலிங்கத்தின் வீட்டுக்குக் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்ற பொலிஸார் இருவர் குறிப்பிட்ட நபர் ஒருவரின் பெயரைக் கூறி, இவர் எங்கு இருக்கிறார். இவரைத் தெரியுமா என்று விசாரித்துள்ளனர். ஆனால் பொலிஸார் பெயர் குறிப்பிட்டுக் கேட்ட நபரைத் தனக்குத் தெரியாதென்று கூறிவிட்டதாக ஜோதிலிங்கம் தெரிவித்தார். அதன் பின்னர் அன்றிரவு எட்டு மணியளவில் அவருடைய வீட்டு அழைப்பு மணி அழுத்தப்பட்டிருக்கிறது.
டிச. 09 14:08

சுவிஸ் தூதரகப் பெண் பணியாளரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

(வவுனியா, ஈழம்) சுவிஸ்லாந்துத் தூதரகப் பெண் பணியாளரிடம் இன்று திங்கட்கிழமை இரண்டாவது நாளாகவும் விசாரணை இடம்பெற்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை சுமார் ஐந்து மணி நேர விசாரணை நடத்தப்பட்டிருந்தது. இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின்போது கொழும்பில் சுவிஸ்லாந்துத் தூதரக அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர். சென்ற 25 ஆம் திகதி தூதரகத்தில் பணியாற்றும் கார்னியர் பானிஸ்டர் பிரான்சிஸ் (Ganier Banister Francis) என்ற பெண் பணியாளரே கடத்தப்பட்டிருந்தார். இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கும் இந்தக் கடத்தலுக்கும் தொடர்பில்லையென இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகத் தெரிவித்திருந்த நிலையில் இந்த விசாரணை இடம்பெறுகின்றது.
டிச. 08 22:17

கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சுவிஸ் தூதரகப் பணியாளர் குற்றப்புலனாய்வுப் பொலிஸாரிடம் வாக்குமூலம்

(வவுனியா, ஈழம்) இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள சுவிஸ்லாந்துத் தூதரக பெண் அதிகாரி கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டு இரண்டு மணித்தியாலத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். சென்ற நவம்பர் மாதம் 25 ஆம் திகதி வெள்ளைவானில் வைத்துக் கடத்தப்பட்டிருந்ததாக சுவிஸ்லாந்துத் தூதுவர் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு முறையிட்டிருந்தார். இதனையடுத்து வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன சுவிஸ்லாந்துத் தூதுவரைச் சந்தித்து உரையாடியிருந்தார். ஆனாலும் இந்தக் கடத்தலுக்கும் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கும் தொடர்பில்லை என்று அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்திருந்தார்.
டிச. 07 21:10

சர்வதேச மத்தியஸ்த்தத்துடனான பேச்சுக்குச் சுமந்திரனின் ஜெனீவா அணுகுமுறை வழி வகுக்குமா?

(யாழ்ப்பாணம், ஈழம்) கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனைச் சந்தித்து உரையாடியுள்ளார். கோட்டாபய ராஜபக்ச இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது அமெரிக்கா ஆதரவு வழங்கியிருந்தது என்ற கருத்துக்கள் சகல மட்டங்களிலும் நிலவியிருந்தது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இந்த நிலையில் சம்பந்தனுடன் சென்ற வியாழக்கிழமை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வடக்குக்- கிழக்குத் தாயகத்தின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாகச் சம்பந்தன் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.
டிச. 06 20:52

அடைமழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இடம்பெயர்ந்தனர்

(கிளிநொச்சி, ஈழம்) வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ச்சியாக மழை பெய்தமையினால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி. மற்றும் மட்டக்களப்புப் பிரதேசங்களில் உள்ள தாழ்ந்த பகுதிகளில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ளனர். குறிப்பாகக் கிளிநொச்சி மாவட்டம் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியில் ஆறாயிரத்து 841 குடும்பங்களை சேர்ந்த இருபத்து இரண்டாயிரத்து 262 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு்ள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
டிச. 06 15:13

ரஷியக் கடற்படையின் உயர்மட்டக் குழு திருகோணமலையில் உரையாடல்

(திருகோணமலை, ஈழம்) கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ரஷிய நாட்டுக் கடற்படையின் உயர்மட்டக்குழு ஒன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது. பாதுகாப்புக் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அன்ரோய் இலனிக் உள்ளிட்ட ரஷியப் படைகளின் உயா்மட்டக் குழுவினரே இலங்கைக்கு வருகை தந்தனர். இக் குழுவுக்கு ரஷியக் கடற்படையின் உயர்மட்ட அதிகாரி ரியல் அட்மிரல் அலெக்ஸான்டர் வி. கார்ப்போவ் (Rear Admiral Dr. Alexander V. Karpov) தலைமை தாங்கினார். பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன உள்ளிட்ட இலங்கைக் கடற்படைஉயர் அதிகாரிகளை சென்ற முதலாம் திகதி திங்கட்கிழமை சந்தித்த ரஷியக் கடற்படையின் உயர்மட்டக்குழு கிழக்கு மாகாணத்துக்குப் பயணம் செய்திருந்தது.
டிச. 05 22:31

எதிர்க்கட்சித் தலைவராக சஜித்- சபாநாயகருக்கு அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழு முடிவு செய்துள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று வியாழக்கிழமை கூடிய கட்சியின் நாடாளுமன்றக் குழு, எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதென தீர்மானித்துள்ளது. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் பதவி வகிப்பாரென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவன்ச சபாநாயகர் கரு ஜயசூரியவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
டிச. 04 23:58

கடத்தப்பட்டுப் பாதிக்கப்பட்டுள்ள தூதரக அதிகாரியை சிகிச்சைக்காக சுவிஸ் கொண்டு செல்ல அரசாங்கம் மறுப்பு

(வவுனியா, ஈழம்) கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிஸ்லாந்துத் தூதரகப் பெண் அதிகாரியை மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையிலிருந்து சுவிஸிலாந்துக் கொண்டு செல்வதற்கு சுவிஸ்;லாந்துத் தூதரகம் கோரிய அனுமதியை மறுத்துவிட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியை அவரது குடும்பத்துடன் சுவிஸ்லாந்துக்குக் கொண்டு செல்ல சுவிஸ்லாந்துத் தூதரகம் இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால் குற்றப் புலனாய்வுப் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்காமல் அவர் இலங்கையை விட்டு வெளியே செல்ல முடியாதெனக் கூறியதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
டிச. 04 16:01

அடை மழையால் வாழைச்சேனை, கோறளைப்பற்று வடக்கு வாகரை வெல்லாவெளி மக்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சம்

(மட்டக்களப்பு, ஈழம் ) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்கின்ற அடைமழையினால் ஆறு பிரதேசசெயலகங்களில் வசிக்கும் மக்கள் பாதிப்புக்குள்ளாகி இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மண்முனை வடக்கு பிரதேச பிரிவிலும் காத்தான்குடி பிரதேசப்பிரிவிலும் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேசப்பிரிவிலும் அதுபோன்று கோறளைப்பற்று தெற்கு கிரான் ,கோறளைப்பற்று வாழைச்சேனை ,கோறளைப்பற்று வடக்கு வாகரை மற்றும் வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் வசிக்கின்ற 1050 குடும்பங்களை சேர்ந்த 3765 பேர் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த நிலையப்பணிப்பாளர் எ.எம்.எஸ் சியாத் தெரிவித்தார்.