டிச. 24 23:50
(வவுனியா, ஈழம்)
ஜெனீவா மனித உரிமைச் சபையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தையும் அதன் மூலம் எழவுள்ள சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் ஏனைய அரச நிறுவனங்களிடையே தொடர்புடைய அனைத்து விடயங்களையும் புதிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறினார்.