நிரல்
ஜூலை 11 22:28

மீண்டும் கொரோனா அச்சுறுத்தல், ஒரேநாளில் 300 பேருக்கு தொற்று உறுதி

(வவுனியா, ஈழம்) இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாகத் திடீரென அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்ற வியாழக்கிழமை 87 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக 196 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது.
ஜூலை 06 22:47

வவுனியா குருமன்காட்டுப் பிரசேத்தில் புதிய இராணுவச் சோதனைச்சாவடி

(வவுனியா, ஈழம்) வடமாகாணம் வவனியா மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம்முள்ள வவுனியா குருமன்காட்டுப் பிரதேசத்தில் புதிதாக இராணுவச் சோதனைச்சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனமடைந்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகமள்ள இந்தப் பிரதேசத்தில் இராணுவச் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதால் அன்றாடத் தேவைகளுக்காகச் சென்றுவரும் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறு இராணுவச் சோதனைசச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதால் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் முறையிட்டுள்ளனர்.
ஜூலை 03 22:28

சிங்கள மக்களின் வாக்குகளினால் ஆட்சியமைப்போம்- மகிந்த

(வவுனியா, ஈழம்) வடக்குக் கிழக்கு மக்களின் வாக்குகள் இன்றி சிங்கள மக்களினால் ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்ய முடியுமென பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். காலி பத்தேகம பிரதேசத்தல் நேற்றுப் புதன்கிழமை மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத் தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு அரசாங்கத்தை அமைத்தால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காண முடியுமென்றும் கூறினார். சென்ற புதன்கிழமை தமிழ் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பிரதம ஆசிரியர்கள் ஆகியோரைச் சந்தித்த மகிந்த ராஜபக்ச, தமிழ் மக்களின் ஆதரவுடன் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி ஆட்சியமைக்கும் என்று கூறியிருந்தார்.
ஜூன் 29 22:33

ஜனாதிபதி இராணுவ ஆட்சி நடத்துவதாக ஐக்கியதேசியக் கட்சி குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதியாகப் பதவியேற்ற கடந்த ஏழு மாதங்களிலேயே இலங்கையில் இராணுவ ஆட்சியை கோட்டாபய ராஜபக்ச உருவாக்கியுள்ளதாக ஐக்கியதேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலிதரங்கே பண்டார குற்றம் சுமத்தியுள்ளார். இந்த இராணுவ ஆட்சி தொடர்பாகத் தங்போது மக்களுக்கு விளக்கமளித்து வருவதாகவும் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் அவதானித்து வருவதாகவும் அவர் கூறினார். கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தல் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், சுயாதீனமாகச் செயற்பட வேண்டிய இலங்கைச் சுயாதீன ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஜூன் 26 12:57

வரலாற்றுப் பாடநூல்களில் பௌத்த சமயத்திணிப்பும் பல்கலைக்கழகத் தமிழ்ச் சமூகத்தின் கவனயீனமும்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழான இலங்கைத் தேசியம் என்பதற்குள், ஈழத்தமிழர்களையும் இணைத்துவிட வேண்டுமென்ற நோக்கம் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில், சிங்கள அரசியல் கட்சிகளிடையே மேலோங்கி வருகின்றது. இதன் உச்சத்தை 2015ஆம் ஆண்டு மைத்தரி- ரணில் அரசாங்கத்தில் காணமுடிந்தது. இலங்கைத் தேசியத்தை மையமாகக் கொண்டு தமிழ்த்தேசிய அரசியல் நீக்கத்துக்கான முதற்கட்ட ஏற்பாடாகவே ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியிருந்தது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஒத்துழைப்பும் கொடுத்திருந்தது. 
ஜூன் 24 22:16

நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க இந்தியா தவிர்ந்த தெற்காசிய நாடுகளின் பிரதிநிதிகள் வருவர்

(வவுனியா, ஈழம்) நடைபெறவுள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிப்பதற்காக சர்வதேசக் கண்காணிப்பாளர்களை வரவழைப்பது தொடர்பாக இலங்கைச் சுயாதீனதட் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான இலங்கைச் சுகாதார அமைச்சின் அறிவறுத்தல்களுக்கு அமைவாக சர்வதேசக் கண்காணிப்பாளர்களை வரவழைப்பதென ஏற்கனவே திர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வரவில்லையென்பதால் இந்தியா தவிர்ந்த ஏனைய தெற்காசிய நாடுகளில் இருந்து கண்காணிப்பாளர்களை வரவழைப்பது குறித்து Nணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஆலோசித்துள்ளார்.
ஜூன் 23 22:07

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் பணம் அச்சிட உத்திரவிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டா?

(வவுனியா, ஈழம்) இலங்கைக்குக் கிடைத்த நிதியுதவிகள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரிய பதில் வழங்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. நாடாளுமன்றம் மூன்று மாதங்களுக்கு மேலாகக் கூட்டப்படாத நிலையில். கிடைத்த நிதியுதவிகளின் அளவுகளுக்கு ஏற்ப எவ்வாறு பணம் அச்சிடப்பட்டது என்பது குறித்து ஏற்கனவே எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசாங்கம் உரிய பதில் வழங்கவில்லை என்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்களான சுஜீவ சேனசிங்க, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஜூன் 21 21:22

மாகாண சபைகளைக் கைவிட ராஜபக்ச அரசாங்கம் ஆலோசனை

(வவுனியா, ஈழம்) இனப்பிரச்சினைக்குத் தீர்வாகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறையை இலங்கை அரசாங்கம் கைவிடக் கூடிய நிலை இருப்பதாகக் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக வடக்குக்- கிழக்கு மாகாண சபைகள் உள்ளிட்ட அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடத்தப்படவில்லை. இது சட்டச் சிக்கலை ஏற்படுத்துமென இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் அது தொடர்பாகப் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் எதுவுமே கருத்தில் எடுக்கவிலலையெனக் கூறப்படுகின்றது.
ஜூன் 19 13:39

மேற்குலகை நம்பிய இரு பிரதான சிங்களக் கட்சிகளும் இன்று பிளவுபட்டுக் கிடக்கும் அவலம்

(யாழ்ப்பாணம், ஈழம்) குறிப்பிட்ட நாடொன்றில் அமெரிக்கா தலையிட வேண்டுமெனக் கருதினால், அந்த நாட்டில் ஏதேனும் பிரச்சினையேற்படும்போது. அங்கு உதவி செய்வதாகக் கூறிக்கொண்டு அமெரிக்கா நுழைந்துவிடுமென நவோமி க்ளீன் என்ற கனேடிய எழுத்தாளர் எழுதிய த ஷொக் டொக்ரின் (The Shock Doctrine) என்ற நூலில் கூறுகிறார். அதாவது உதவி என்ற பெயரில் ஒரு நாட்டில் வாழும் இனங்களிடையே குழப்பங்கள், முரண்பாடுகள் உருவாக்கப்பட்டு அது ஆயுத மோதலாகக் கூட மாறிவிடலாம் என்பது ஒன்று, மற்றையது அந்த நாட்டில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் பிளவுபடுவது அல்லது புதிய கட்சிகள் உருவாகுவது போன்றவற்றைக் குறிக்ககுமென அர்த்தப்படுத்தலாம்.
ஜூன் 18 21:18

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், அரச ஊழியர்களுக்கு நிவாரணங்கள் இல்லை- எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) கொரானா வைரஸ் தாக்கதிதினால் ஏற்பட்ட முடக்கநிலையினால் தொழில் நடவடிக்கைகளை இழந்து வருமானம் இன்றிச் சிரமமப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் உதவியளிக்கவில்லை என்று கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. குடும்பம் ஒன்றுக்கு ஐயாயிரம் ரூபா வழங்கப்பட்டபோதும், அனைத்துக் குடும்பங்களுக்கும் அந்த உதவித் தொகை வழங்கப்படவில்லை ஐயாயிரம் ரூபா போதுமானதல்ல என்றும் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, ஆகிய கட்சிள் குற்றம் சுமத்தியுள்ளன.