(யாழ்ப்பாணம், ஈழம்)
குறிப்பிட்ட நாடொன்றில் அமெரிக்கா தலையிட வேண்டுமெனக் கருதினால், அந்த நாட்டில் ஏதேனும் பிரச்சினையேற்படும்போது. அங்கு உதவி செய்வதாகக் கூறிக்கொண்டு அமெரிக்கா நுழைந்துவிடுமென நவோமி க்ளீன் என்ற கனேடிய எழுத்தாளர் எழுதிய த ஷொக் டொக்ரின் (The Shock Doctrine) என்ற நூலில் கூறுகிறார். அதாவது உதவி என்ற பெயரில் ஒரு நாட்டில் வாழும் இனங்களிடையே குழப்பங்கள், முரண்பாடுகள் உருவாக்கப்பட்டு அது ஆயுத மோதலாகக் கூட மாறிவிடலாம் என்பது ஒன்று, மற்றையது அந்த நாட்டில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் பிளவுபடுவது அல்லது புதிய கட்சிகள் உருவாகுவது போன்றவற்றைக் குறிக்ககுமென அர்த்தப்படுத்தலாம்.