நிரல்
ஜன. 02 21:49

சிறிதரன், சுமந்திரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும், ஒருசேரக் கொடுத்த தமிழ்த் தேசியப் பாடம்

(கிளிநொச்சி, ஈழம்) பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தை அமுல்படுத்தித் தருமாறு இந்தியாவிடம் கோருவதை எதிர்த்தால் போதும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிராகரிக்காமல் இருக்கிறோம் என்று பொன்னம்பலம் கஜேந்திரகுமாரும் மதியாபரணம் சுமந்திரனும் தத்தமது நிலைப்பாட்டை வேறு வேறு வடிவங்களில் வெளிப்படுத்தியிருந்தார்கள். கடந்த வருடம் ஜனவரியில் இன அழிப்பு விசாரணை கோருவதை விட ஜெனீவாவில் இருந்து பொறுப்புக்கூறலை வெளியே எடுத்தாற்போதும் என்று ஆரம்பத்தில் கொழும்பில் பாக்கியசோதி சரவணமுத்துவின் ஒழுங்கில் சந்தித்தபோது உடன்பட்டது போல அன்றி, இம்முறை சற்று வித்தியாசமாக, இவ்விருவரும் ஒரே நிலைப்பாட்டில் நேரடியாகக் கலந்துகொள்ளாமல், முரண்பட்டவாறு உடன்பட்ட விநோதம் நடந்திருக்கிறது.
ஜன. 01 22:39

தேசியத்தை மட்டுமல்ல சுயநிர்ணய உரிமையையும் கைவிட்ட கடிதம்

(வவுனியா, ஈழம்) இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு பதின்மூன்றாம் திருத்தச்சட்டத்தை வலியுறுத்தி கடிதம் எழுதுமாறு கோரிய ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் என்ற கட்சியின் முன்னெடுப்பில் ஒன்றுகூட்டப்பட்டு இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக 2022 ஜனவரி முதலாம் திகதி இறுதிசெய்திருந்த கடித வரைபில் தமிழரசுக்கட்சியில் தமிழ்த்தேசியம் சார்ந்த பலருக்கு உடன்பாடு இல்லை என்று தெரியவருகிறது. இது தொடர்பாக நீண்டநேரம் புதுவருடநாளன்று விவாதித்த தமிழரசுக்கட்சியினர் தேசியத்தை ஏற்கனவே பெயரளவில் மட்டுமே கொண்டுள்ள தமது கூட்டமைப்பில் தற்போது உள்ளக சுயநிர்ணய உரிமை என்பதையும் கைவிட்டுச் செல்வது பொருத்தமில்லை என்று விவாதித்துள்ளதாக தமிழரசுக்கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் கூர்மைக்கு சனிக்கிழமை இரவு தெரிவித்தன.
டிச. 31 22:15

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே இந்திய-இலங்கை ஒப்பந்தமும் 13 ஆவது திருத்தமும்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஈழத்தமிழர் தேசத்தின் பாரம்பரியத் தாயகமாக ஒன்றிணைந்த வடக்கு கிழக்கை நேர்த்தியாக அங்கீகரிக்கவில்லை. வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழிடம் என்று மட்டுப்படுத்தப்பட்ட ஒரு கோட்பாட்டையே முன்வைத்தது. கிழக்கில் மட்டும் நிரந்தர இணைப்புக்கான பொதுவாக்கெடுப்பு என்று தமிழ்த் தேசத்தின் நிலவொருமைப்பாட்டைச் சிக்கலுக்குள்ளாக்கியது. அந்த ஒப்பந்தம் 'பல்லின சமூகம்' என்ற சொற்பிரயோகத்தைக் கையாண்டிருப்பதில் ஏதோ விடயம் இருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். ஆனால், அது ஒரு பல்லின சமூகமாக நில அடையாளத்தையும் அர்த்தமற்ற அதிகாரப்பகிர்வினூடாக ஈழத்தமிழர்கள் இழப்பதற்கும் பயன்படக்கூடிய சொற்பிரயோகமே. இதே ஒப்பந்தத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என்றும் சிலர் எண்ணுவது வேடிக்கையானது.
டிச. 30 22:20

அரசியல் மற்றும் நிதி நெருக்கடி- மூன்று அமைச்சர்கள் பதவி விலகத் தயாரென அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை ஒருபோதும் மீறவில்லை என்றும் அமைச்சர் பதவிகளில் இருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். அமைச்சரவையில் விவாதிக்க வேண்டிய விவகாரங்களை பொதுவெளியில் விமர்சிப்பது அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் செயற்பாடு என்று கூறுவதானால், அமைச்சரவையில் இரகசியமான தீர்மானங்களை மேற்கொள்வதும் அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் செயல் என்றும் மூன்று அமைச்சர்களும் சுட்டிக்காட்டினர்.
டிச. 29 21:43

வடமாகாணத்தில் நான்கு இளைஞர்கள் கொலை

(கிளிநொச்சி, ஈழம்) வட மாகாணத்தின் மன்னார் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் ஞாயிற்றுகிழமை ஆண்கள் நால்வரின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். மன்னார் ஒலைத்தொடுவாய் பகுதியில் பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டவர், பொலிஸாருக்கு தகவல் வழங்கும் நபர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 51 வயதுடைய அப்துல் ரசாக் முகம்மது கௌவ்ஸ் எனும் 3 பிள்ளைகளின் தந்தை என மன்னார் பொலிஸார் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். ஞாயிறு முற்பகல் 11.30க்கு மன்னார் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இரண்டு நபர்களால், இவர் வாள்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
டிச. 29 21:28

டொலர்களின் கையிருப்பு 3.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு என்கிறார் மத்திய வங்கி ஆளுநர்

(யாழ்ப்பாணம், ஈழம்) டொலர்களின் கையிருப்பு 3.1 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறியுள்ளமை உண்மைக்கு மாறானதென ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. 3.1 பில்லியன்களாக அதிகரித்துள்ளதென்று அஜித் நிவாட் கப்ரால் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று புதன்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், நளின் பண்டார, கடந்த வாரம் 1.6 பில்லியன்களாக இருந்து திடீரென எவ்வாறு 3.1 பில்லியன்களாக உயர்வடைந்தது என்று அஜித் நிவாட் கப்ரால் கூற வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
டிச. 28 22:24

மன்னார் பிரதேச சபையின் வரவுசெலவுத் திட்டம் தோல்வி

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆட்சி நிருவாகத்தில் உள்ள மன்னார் பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நேற்றுத் திங்கட்கிழமை தோற்கடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2022ஆம் ஆண்டிற்கான மன்னார் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தொடர்பான கூட்ட அமர்வு பேசாலையில் உள்ள மன்னார் பிரதேச சபையின் பிரதான செயலகத்தில் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். முஜாஹிர் தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்றது.
டிச. 27 22:32

பசில் ராஜபக்சவை கடுமையாக விமர்சித்த விஜயதாச

(வவுனியா, ஈழம்) சீனாவை எதிர்த்து நிற்கும் சக்தி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்துக்கு இல்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமெரிக்க- இந்திய அரசுகளின் உதவியை எதிர்பார்க்கும் இந்த அரசாங்கத்துக்கு சீனாவை நேரடியாக எதிர்க்கத் தகுதியில்லை என்றும், சீனாவின் கடன் பிடிக்குள் சிக்குண்டுள்ளதாகவும் விஜயதாச ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருடன் முரண்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தரப்பில் தனித்துச் செயற்பட்டு வரும் விஜயதாச ராஜபக்ச. நிதியமைச்சர் பசில் ராஜபக்சவைக் கடுமையாக விமர்சித்தார்.
டிச. 25 21:03

முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய மருத்துவக் கழிவுப் பொருட்கள்

(முல்லைத்தீவு) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கரையோரப் பகுதிகளில் பயன்படுத்திய முகக்கவசங்கள், மருத்துவக் கழிவுகள், அன்றாட பாவனைப் பொருட்களின் வெற்றுப்பிளாஸ்ரிக் கொள்கலன்கள் மற்றும் பாலித்தீன் பைகள் உட்பட பல்லாயிரக் கணக்கான கழிவுப் பொருட்கள் வட மாகாணத்தின் முல்லைத்தீவு கடற்பரப்பில் தினமும் கரையொதுங்குவதுடன் அவற்றினால் மீனவர்களின் வலைகள் கடுமையாகச் சேதமடைவதாக மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிங்கராசா பிரதாஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
டிச. 23 09:24

நிதி நெருக்கடி- சர்வதேச நாணய நிதியத்திடம் கோர முடிவு

(வவுனியா, ஈழம்) தற்போது எதிர்நோக்கியிருக்கும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் உள்ளகப் பேச்சுக்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியைப் பெற அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் மூத்த அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி உயர்நிலை அதிகாரிகளின் கடும் எதிர்ப்பினால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.