ஏப். 30 10:56
(மன்னார், ஈழம்)
இலங்கைத்தீவின் தமிழர் தாயகப் பகுதியில் காணாமல் போன எமது அன்புக்குரிய உறவுகளை மீட்டுத்தருமாறு தொடர்சியாகப் போராடிவரும் நிலையில் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் ஜனாதிபதியும், பிரதமரும் அதையிட்டு அலட்டிக்கொள்ளாமல் வெறுமனே அவர்களின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றனர். இதன்மூலம் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவருக்கும், காதுகள் மந்தமாகியுள்ளதுடன், கண்களும் பார்வையிழந்து குருடாகிவிட்டது என்றே, கருதவேண்டியுள்ளதாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி திருமதி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.