(வவுனியா, ஈழம்)
நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைத்தீவுக்கான அவசரகால கடன் சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவுள்ளது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வியாழக்கிழமை விடுக்கப்படுமென கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுப் பெற்ற கடன்களைச் சுமையாகக் கொண்டுள்ள இலங்கை, நாணய நிதியத்திடமிருந்து மூன்று பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கோரியிருந்தது. அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவசரகாலக் கடன் உதவிகள் கோரப்பட்டுள்ளதால், அது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.