நவ. 27 08:31
(யாழ்ப்பாணம், ஈழம்)
தமிழர் தாயகம் வடக்குக் கிழக்கில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. சென்ற பதினைந்தாம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகள், ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 க்கு அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலும் தீபம் ஏற்றப்பட்டது. பெருமளவு மக்கள் பங்குபற்றினர். மலர் தூபி தீபம் ஏற்றி இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் பெருமளவு மக்கள் பங்குபற்றியிருந்தனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக, கிழக்குப் பல்கலைக்கழக, மாணவர்களால் போராட்டத்தில் உயிர்நீர்த்த மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.