பெப். 14 16:16
(வவுனியா, ஈழம்)
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு பதின் நான்கு வருடங்களின் பின்னர் திங்கட்கிழமை பிணை வழங்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்து, 22 பேர் காயமடைந்தமை தொடர்பாக இந்த நான்கு கைதிகளுக்கும் எதிராக இலங்கைக் குற்றப் புலனாய்வுத்துறையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது
சம்பவம் தொடர்பாகப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இருபத்து மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு காலி மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.